பணம் - மனதில் ஏற்படுத்தும் பதிவுகள் - விளைவுகள். manifestations of energy
இயற்கையில் சக்தி பஞ்ச பூதங்களாக பரிணமித்து இயங்குகிறது .இந்த பரிணாமம் மற்றும் இயக்கம் இயற்கையின் கட்டுப்பாட்டில் நடக்கிறது.
மனிதனின் புத்தியின் செயல்பாட்டால் சக்தி செயற்கையாக பல பரிணாமங்கள் எடுக்கிறது. புத்தியை ஆள்வது மனிதன். ஆகையால் இந்த பரிணாமங்களை உருவாக்குகிறவனும் மனிதனே . அதனால் இந்த பரிணாமங்களின் கட்டுப்பாடு மனிதன் இடம் தான் இருக்கிறது.
இயற்கை சக்திகள் அழிவையும் ஆக்கத்தையும் திடீரெனெ எதிர்பாராத சமயங்களில் ஏற்படுத்துகின்றன . ஏன், எப்பொழுது எப்படி என்று கணிப்பது கடினம். ஆனாலும் இப்பொழுது விஞ்ஞான வளர்ச்சியால் அதுவும் சாத்தியமாகி இருக்கிறது. இயற்கையால் ஏற்படுகிற ஆக்கமானாலும் சரி அழிவானாலும்சரி மிகவும் கொடூரமானதாகவே அமைகிறது.
மின்சாரம் என்பது மனித நிர்மித சக்தி. மனிதன் உபயோகிக்கும் இயந்திரங்கள் அனைத்தும் சக்தியின் பல பரிணாமங்களை செயற்கையாக வெளிக்கொணர்கின்றன. ஆயுதங்கள் மனித நிர்மித சக்திகள். இவைகள் அனைத்தும் மனிதனுக்கு சுகங்களையும் ஆடம்பரங்களையும் அள்ளித்தர வல்லவை. அதே சமயம் இவைகளும் இயற்கை சக்தி ஏற்படுத்தும் அழிவிற்கு இணையான அழிவைத்த தரவல்லன.
மனிதனின் புத்தியின் செயல்பாட்டால் சக்தி செயற்கையாக பல பரிணாமங்கள் எடுக்கிறது. புத்தியை ஆள்வது மனிதன். ஆகையால் இந்த பரிணாமங்களை உருவாக்குகிறவனும் மனிதனே . அதனால் இந்த பரிணாமங்களின் கட்டுப்பாடு மனிதன் இடம் தான் இருக்கிறது.
இயற்கை சக்திகள் அழிவையும் ஆக்கத்தையும் திடீரெனெ எதிர்பாராத சமயங்களில் ஏற்படுத்துகின்றன . ஏன், எப்பொழுது எப்படி என்று கணிப்பது கடினம். ஆனாலும் இப்பொழுது விஞ்ஞான வளர்ச்சியால் அதுவும் சாத்தியமாகி இருக்கிறது. இயற்கையால் ஏற்படுகிற ஆக்கமானாலும் சரி அழிவானாலும்சரி மிகவும் கொடூரமானதாகவே அமைகிறது.
மின்சாரம் என்பது மனித நிர்மித சக்தி. மனிதன் உபயோகிக்கும் இயந்திரங்கள் அனைத்தும் சக்தியின் பல பரிணாமங்களை செயற்கையாக வெளிக்கொணர்கின்றன. ஆயுதங்கள் மனித நிர்மித சக்திகள். இவைகள் அனைத்தும் மனிதனுக்கு சுகங்களையும் ஆடம்பரங்களையும் அள்ளித்தர வல்லவை. அதே சமயம் இவைகளும் இயற்கை சக்தி ஏற்படுத்தும் அழிவிற்கு இணையான அழிவைத்த தரவல்லன.
மனித நிர்மித சக்திகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ள இயலும். ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு கைமாறிக்கொள்ளவும் இயலும். இங்கு தான் வியாபாரம், பணம் பயன்பாட்டுக்கு வருகிறது.
இந்த வியாபாரம் என்பது எங்கே, எப்போது, ஏன் தொடங்கியது?
உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டபோது, அல்லது பூமியில் ஒரு குறிப்பிட்ட இடம் ஒருவனுக்கு தேவை என்று வருகிறபோது, ஒருவனிடம் இல்லாத பொருளை நிறைய இருப்பவனிடம் இருந்து பெறும்போது கைமாறாக கொடுக்கப்படுவதற்கு பொதுவான, அனைவருக்கும் சம்மந்தமான ஒரு ஏற்பாட்டின் அடிப்படையில் அதற்காக ஏற்படுத்தப்பட்டது தான் பணம். பண்டமாற்று என்பது இருவரிடம் வேறுபட்ட பொருட்கள் இருக்கும் நிலையில் பரிமாறிக்கொள்வது. ஒருவனிடம் இருக்கும் பொருளை தன்னிடம் மாற்றுவதற்கு பொருள் இல்லாத ஒருவன் வேறு ஒருவனிடம் இருக்கும் பொருளைபெறுவதற்காக கைமாறுவதற்காக ஏற்படுத்தப்பட்ட மாயத்தன்மை வாய்ந்த ஒரு செயற்கை சக்தி தான் பணம். பணம் என்பது மதிப்பேற்றப்பட்ட ஒரு மாய சக்தி. இதன் மூலம் ஏற்படும் பரிமாற்றம் தான் வியாபாரம் என்பது.
ஆகவே பணம் என்பது மனிதனால் ஏற்படுத்தப்பட்ட ஒரு பரிணாம சக்தி. இது வித்தியாசமான ஒருசெயற்கை பரிணாமம். செயற்கையான சக்தி பலவிதங்களில் இயற்கையையே கட்டுப்படுத்தும் தன்மையது, அப்படிப் பட்ட செயற்கை சக்திகளில் மிகவும் சக்தி வாய்ந்தது பணம். இது ஒன்று இருந்தால் எல்லா விதமான செயற்கை சக்திகளையும் உரிமை எடுத்து கையாள முடியும். எல்லா விதமான இன்பங்களையும் வசதிகளையும் ஆடம்பரங்களையும் இந்த உலகத்தில் வாங்க முடியும்; அனுபவிக்க முடியும்.
இது மனிதனின் இயற்கை தன்மையையே மாற்ற வல்லது. இது ஆன்மா, மனம் புத்தி என்ற கட்டுப்பாட்டு நிலையை தலைகீழாக மாற்றும் வல்லமை படைத்தது. பணம், புத்தி ,மனம், ஆன்மா என்று கட்டுப்பாட்டு வரிசையை திருப்பிவிடும் வல்லமை உடையது.
மனிதனின் மனதை பக்குவப்படுத்துவது புத்தி அல்லது அறிவு .
மனித மனம் பதிவுகளை ஏற்று பண்படும் காலம் 5 வயது முதல் 10 வயது வரையிலான காலம் தான்.
சிறு வயதில் களங்கமின்றி சுத்தமாக இருக்கும் புத்தி அல்லது அறிவு அவன் வளருந்தோறும் வீட்டில் நடப்பதையும் சுற்றுப்புறங்களை பார்த்து அறிந்தும் கல்வி கேள்விகளாலும் அதற்கேற்றாற்போல மனதை பக்குவப்படுத்திக் கொள்கிறது. மற்றும் சுற்றத்தார் பல பதிவுகளை தன்னிச்சையாக குழந்தைகளின் மனதில் புகுத்துகிறார்கள். இந்த பதிவுகள் மாற்றமுடியாத அளவுக்கு மனதில் ஆழமாகப் பதிந்து விடுகின்றன. இந்த பதிவின் அடிப்படையில் மனம் சிந்தித்து அந்த வழியில் தன்னை பக்குவப்படுத்திக் கொள்கிறது. மனதின் இந்தப் பதிவின் அடிப்படையிலேயே மனித மனம் பிற்காலங்களில் சிந்தனை செய்கிறது. அந்த சிந்தனையின் அடிப்படையிலேயே பின்னர் புத்தி அல்லது அறிவு வேலை செய்கிறது.
சிறு வயதில் ஆன்மாவைப்பற்றிய அறிவும் மனத்தைப்பற்றிய உண்மை அறிவும் புத்தியை இயக்க மனதில் பதிய வைக்கப்படுவதில்லை. அதனால் அந்த அறிவு பிற்காலங்களில் மனத்தால் தன பதிவுகளில் இருந்து புத்திக்கு உணர்த்தப்படுவதில்லை.
நாம் வணங்கும் தெய்வங்களையும் அவர்களுக்கு செய்யப்படும் ஆச்சார ஆடம்பரங்களையும் திரும்ப திரும்ப பார்த்தும் தொடர்ந்து கேட்டும் நாம் புத்தி மூலமாக மனதில் பதிய வைத்துக்கொள்கிறோம். அதுதான் ஆன்மிகம் என்ற தவறான பதிவை மனதில் ஏற்படுத்திக்கொள்கிறோம். அதனால் நமக்கு ஆன்மாவைப்பற்றியோ அல்லது உண்மையான ஆன்மீகத்தைப்பற்றியோ எந்த அறிவும் கிடைப்பதில்லை. மாறாக இந்த தெய்வங்களை வணங்குவதும் ஆடம்பரங்கள் செய்வதும் தான் ஆன்மிகம் என்கிற பதிவு மனதில் ஏற்படுகிறது.
அத்துடன் இந்தக் காலங்களில் தன் வீட்டில் உள்ளவர்களும் பிறரும் பணப் புழக்கத்துக்கு அடிமை ஆகி அனுபவிக்கும் வசதிகளையும் ஆடம்பரங் களையும் புத்தி பார்த்து அனுபவித்து மனதில் பதிய வைத்து கொள்கிறது. சுற்றுப்புறங்களை பார்த்தும் அறிந்தும் கல்வி கேள்விகளாலும் இப்படி தவறான அறிவின் அடிப்படையிலேயே மனம் தன்னை பக்குவப்படுத்திக் கொள்கிறது. இவை எல்லாமே பணத்தையும் அதனால் ஏற்படும் வசதி முதலியவற்றையும் சம்பந்தப் பட்டவைகளாகவே இருப்பதால் பணத்தை நாடும் அல்லது தேடும் வழிகளையே புத்தி ஆராய்ந்து சிந்தித்து வாழக் கற்றுக்கொள்கிறது. இப்படி பக்குவப்பட்ட புத்தி அந்த வழியிலேயே மனதில் பதிவேற்றுகிறது அதனால் பிற்காலங்களில் மனம் பணத்தின் வழியே சிந்திக்கத்தொடங்குகிறது.
மனம் எப்படி புத்தியை இயக்குகிறதோ அது போலவே பணமும் மனித புத்தியை தன் கட்டுக்குள் வைக்கும் வல்லமையுடையது. காரணம் ஆன்மீக அறிவுக்குப் பதிலாக பணம் அதன் ஆதிக்கம் தரும் சுக சௌகரியங்கள் மனதில் பதிவாகி இருக்கின்றன.
குழந்தைப்பருவத்தில் மனதில் ஏற்படுத்திய பதிவுகளை யாராலும் திடீரென மாற்றிவிட முடியாது. தன்னைத் தவிர வேறு யார் முயன்றாலும் அந்த பதிவை மாற்ற இயலாது. காரணம் மனது குழந்தைப் பருவத்திற்கு பிறகு வெளியிலிருந்து எந்தப்பதிவையும் புதிதாக ஏற்றுக்கொள்ளும் நிலையில் இருப்பதில்லை.
ஆனால் மாற்றுக்கருத்துக்கள் அறிவுரைகள் கேட்கும் அல்லது அவற்றை அறிந்து கொள்ளும் சந்தர்ப்பங்கள் தொடர்ந்து மீண்டும் மீண்டும் ஏற்படும்பொழுது மனதில் ஒரு சலவை ஏற்பட்டு மாற்றங்கள் நிகழ்கின்றன. அல்லது சுய சிந்தனை செய்து தீர்மானங்கள் எடுக்கும் பயிற்சி மனதிற்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களில் மாற்றங்களுக்கு வழி கிடைக்கிறது.
இளமை பருவம் முடியும்வரையில் வசதிகளும் ஆடம்பரங்களும் என்னவென்று உணராமல் மனம் பக்குவப்பட்டுவிட்டால் பின்னர் புத்தி பணத்தின் வழியே செல்லும் வாய்ப்பு குறைவு.
இதற்கு பழங்காலத்தில் அமைந்த குருகுல வாசம் பயன்பட்டது. வீட்டில் இருந்து விலகி இருந்து ஆன்மீக வழியில் மனதை பக்குவப்படுத்தும் கல்வி முறை அது. வசதிகளையும் ஆடம்பரங்களையும் அறியாது அடக்கம் மரியாதை உழைப்பு முதலானவற்றை கற்றுக்கொடுத்த முறை அது. இந்த வழியில் பக்குவப்பட்ட மனம் பின்னர் இந்த வழியில் இருந்து விடுபடுவது கடினம். இந்த வளர்ப்பு முறையில் புத்தி மனதை சரியான வழியில் பக்குவப்படுத்தி அதன் சிந்தனை வழி அறிவுறுத்தல்படி நடக்கும்.
இன்றைய நிலை அதுவல்ல. எல்லாவிதமான வசதி சௌகரியங்கள் ஆடம்பரங்களை அனுபவிக்கும் இளைமைக்காலம். அல்லது பிறர் அனுபவித்து மகிழ்வதைக் கண்டு வளரும் இளமைக்காலம். இளமை காலத்திலேயே விதவிதமான உணவுப்பழக்கங்களுக்கு அடிமைப்பட்டுப் போதல். உழைப்பை அறியாமல் வளருகின்ற நிலை. சிறிது தூரம் நடக்கும் அளவுக்குக்கூட உடல் உழைப்பின்றி வாகனத்தில் பள்ளிக்குப்போகும் நிலை. பணத்தின் பலம் மனதில் ஆழமாகப் விடும் நிலை.
உண்மையான ஆன்மீகத்தைப்பற்றியோ மனதின் முக்கியத்துவத்தைப் பற்றியோ எந்தவிதமான கல்வியும் அவர்களுக்கு கிடைப்பதில்லை. வளரும் ஒவ்வொரு நிலையிலும் பணத்தின் முக்கியத்துவத்தை மீண்டும் மீண்டும் உணறுகிறார்கள். அதன் தேவையே வாழ்க்கையில் முக்கியம் என்று கொள்கிறார்கள். இங்கு புத்தி மனதிற்கு பணத்தின் முக்கியத்துவத்தையும் அதனை தேடும் அவசியத்தையும் எடுத்து சொல்லி அந்த வழியில் அதனை பக்குவப்படுத்துகிறது.
வாழ்வின் வசதிகளும் ஆடம்பரங்களும் இன்பங்களும் அமைய பணம் காரணமாக அமைகிறது. அதனால் பணம் புத்தியை இயக்கி மனதை தன கட்டுக்குள் கொண்டு வந்து விடுகிறது. பின்னர் மனம் ஆன்மாவைப்பற்றியே சிந்திப்பதில்லை. அதனிடமிருந்து விலகி விடுகிறது. பணத்தைப் பெருக்கும் வழிமுறைகளை மட்டுமே சிந்தித்து அதன் வழி நடக்கிறது.
அடிப்படையில் மனம் ஆன்மாவிற்கு கட்டுப்பட்டது. ஆனாலும் உடலெடுத்த பிறகு ஆன்மாவிற்கு சுய இயக்கம் இல்லை. மனம் வழியாகவே ஆன்மா இயங்குகிறது. ஆனால் மனம் ஆன்மாவிடமிருந்து( தன் விதியைத்தவிர வேறு) எந்த பதிவையும் கொண்டு வருவதில்லை. உலக அனுபவத்தின் அடிப்படையிலேயே பதிவுகள் மனதில் ஏற்படுகின்றன.
நமது கோவில்களில் மனதை சரியான வழியில் பக்குவப்படுத்தும் எந்த போதனைகள் கிடைப்பதில்லை. வழிபாடுகள் பணத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகின்றன. வழிபாடுகள் வெறும் சம்பிரதாய சடங்குகளாக மாறிவிட்டன. இதிகாச, புராணக்கதைகள் நம் மனதில் எந்தவிதமான நேர்மறை எண்ணங்களையோ சிந்தனைகளையோ உருவாக்குவதில்லை. மாறாக மனோதத்துவ அடிப்படையில் ஆழ் மனதில் எதிர்மறையான பதிவுகளை ஏற்படுத்துகின்றன. உதாரணத்திற்கு ஒரு புராணக்கதையை ஒரு தெய்வம் தன நோக்கத்தை நிறைவேற்ற தவறான வழியையும் கீழ்த்தர சூழ்ச்சியையும் பயன்படுத்துகிறது என்று வைத்துக்கொள்வோம். தெய்வமே பின்பற்றுகிற ஒரு வழியை நாமும் கடைப்பிடிப்பதில் எந்த தவறும் இருக்க முடியாது என்ற பதிவு மனதில் உண்டாகிறது.
பணத்தின் கட்டுப்பாட்டில் புத்தி இருக்கும் நிலையில் இயங்கும் மனம் அந்த புத்திக்கு இணங்கி நடப்பதற்கு பக்குவப்பட்டுப் போகிறது. ஆனாலும் தன் மூலதத்துவமாகவும் அடிப்படை இணையாகவும் இருக்கும் ஆன்மாவின் உணர்வும் அடி மட்டத்தில் பிறவியிலேயே உறைந்து கிடப்பதால் நம்மை அறியாமல் மனதின் அடித்தளத்தில் தொடர்ந்து ஒரு போராட்டம் நடை பெற்றுக்கொண்டே இருக்கிறது.. ஆன்மாவின் கட்டுக்குள் இயங்கி புத்தியை கட்டுப்படுத்துவதா அல்லது பணத்திற்கு அடிமைப்பட்ட புத்தியின் வழியில் செல்வதா என்ற போராட்டம். முடிவில் பணமே வெல்லும் . இயற்கை யிலேயே எதிர்மறை சக்திகளுக்கே வலு அதிகம் என்பதால் பணமே வெல்கிறது. ஆனாலும் ஆழ்மனப் போராட்டம் தொடரும்; இது தான் நமது மன இறுக்கத்திற்கு காரணமாக அமைகிறது.
காரணம் மனம் இயற்கையில் ஆன்மாவிற்குச் சொந்த மானது . அதனால் அந்த தொடர்பில் இருந்து அதனால் முற்றிலுமாக விடுபட முடியாது. அதனால் மனதில் இறுக்கம் ஏற்பட்டு அதன் பிரதிபலிப்பு உடலில் ஏற்பட்டு நோய்கள் ஏற்பட காரணமாகி விடுகின்றன.
இந்தக் காலத்தில் பணத்தின் தாக்கத்தில் இருந்து விடுபட்டு, வேறுபட்ட நிலைப்பாட்டில் ஓட்டுவனால் வாழ முடியுமா? எப்படி தாரணம் செய்து வாழ்வது? மனப் போராட்டத்தை எப்படி குறைப்பது? இந்த மாதிரியான சிந்தனைகளுடன் வேறொரு பதிவில் சிந்திப்போம். பொறுமையுடன் படித்ததற்கு நன்றி, வணக்கம்.
மனிதனின் மனதை பக்குவப்படுத்துவது புத்தி அல்லது அறிவு .
மனித மனம் பதிவுகளை ஏற்று பண்படும் காலம் 5 வயது முதல் 10 வயது வரையிலான காலம் தான்.
சிறு வயதில் களங்கமின்றி சுத்தமாக இருக்கும் புத்தி அல்லது அறிவு அவன் வளருந்தோறும் வீட்டில் நடப்பதையும் சுற்றுப்புறங்களை பார்த்து அறிந்தும் கல்வி கேள்விகளாலும் அதற்கேற்றாற்போல மனதை பக்குவப்படுத்திக் கொள்கிறது. மற்றும் சுற்றத்தார் பல பதிவுகளை தன்னிச்சையாக குழந்தைகளின் மனதில் புகுத்துகிறார்கள். இந்த பதிவுகள் மாற்றமுடியாத அளவுக்கு மனதில் ஆழமாகப் பதிந்து விடுகின்றன. இந்த பதிவின் அடிப்படையில் மனம் சிந்தித்து அந்த வழியில் தன்னை பக்குவப்படுத்திக் கொள்கிறது. மனதின் இந்தப் பதிவின் அடிப்படையிலேயே மனித மனம் பிற்காலங்களில் சிந்தனை செய்கிறது. அந்த சிந்தனையின் அடிப்படையிலேயே பின்னர் புத்தி அல்லது அறிவு வேலை செய்கிறது.
சிறு வயதில் ஆன்மாவைப்பற்றிய அறிவும் மனத்தைப்பற்றிய உண்மை அறிவும் புத்தியை இயக்க மனதில் பதிய வைக்கப்படுவதில்லை. அதனால் அந்த அறிவு பிற்காலங்களில் மனத்தால் தன பதிவுகளில் இருந்து புத்திக்கு உணர்த்தப்படுவதில்லை.
நாம் வணங்கும் தெய்வங்களையும் அவர்களுக்கு செய்யப்படும் ஆச்சார ஆடம்பரங்களையும் திரும்ப திரும்ப பார்த்தும் தொடர்ந்து கேட்டும் நாம் புத்தி மூலமாக மனதில் பதிய வைத்துக்கொள்கிறோம். அதுதான் ஆன்மிகம் என்ற தவறான பதிவை மனதில் ஏற்படுத்திக்கொள்கிறோம். அதனால் நமக்கு ஆன்மாவைப்பற்றியோ அல்லது உண்மையான ஆன்மீகத்தைப்பற்றியோ எந்த அறிவும் கிடைப்பதில்லை. மாறாக இந்த தெய்வங்களை வணங்குவதும் ஆடம்பரங்கள் செய்வதும் தான் ஆன்மிகம் என்கிற பதிவு மனதில் ஏற்படுகிறது.
அத்துடன் இந்தக் காலங்களில் தன் வீட்டில் உள்ளவர்களும் பிறரும் பணப் புழக்கத்துக்கு அடிமை ஆகி அனுபவிக்கும் வசதிகளையும் ஆடம்பரங் களையும் புத்தி பார்த்து அனுபவித்து மனதில் பதிய வைத்து கொள்கிறது. சுற்றுப்புறங்களை பார்த்தும் அறிந்தும் கல்வி கேள்விகளாலும் இப்படி தவறான அறிவின் அடிப்படையிலேயே மனம் தன்னை பக்குவப்படுத்திக் கொள்கிறது. இவை எல்லாமே பணத்தையும் அதனால் ஏற்படும் வசதி முதலியவற்றையும் சம்பந்தப் பட்டவைகளாகவே இருப்பதால் பணத்தை நாடும் அல்லது தேடும் வழிகளையே புத்தி ஆராய்ந்து சிந்தித்து வாழக் கற்றுக்கொள்கிறது. இப்படி பக்குவப்பட்ட புத்தி அந்த வழியிலேயே மனதில் பதிவேற்றுகிறது அதனால் பிற்காலங்களில் மனம் பணத்தின் வழியே சிந்திக்கத்தொடங்குகிறது.
மனம் எப்படி புத்தியை இயக்குகிறதோ அது போலவே பணமும் மனித புத்தியை தன் கட்டுக்குள் வைக்கும் வல்லமையுடையது. காரணம் ஆன்மீக அறிவுக்குப் பதிலாக பணம் அதன் ஆதிக்கம் தரும் சுக சௌகரியங்கள் மனதில் பதிவாகி இருக்கின்றன.
குழந்தைப்பருவத்தில் மனதில் ஏற்படுத்திய பதிவுகளை யாராலும் திடீரென மாற்றிவிட முடியாது. தன்னைத் தவிர வேறு யார் முயன்றாலும் அந்த பதிவை மாற்ற இயலாது. காரணம் மனது குழந்தைப் பருவத்திற்கு பிறகு வெளியிலிருந்து எந்தப்பதிவையும் புதிதாக ஏற்றுக்கொள்ளும் நிலையில் இருப்பதில்லை.
ஆனால் மாற்றுக்கருத்துக்கள் அறிவுரைகள் கேட்கும் அல்லது அவற்றை அறிந்து கொள்ளும் சந்தர்ப்பங்கள் தொடர்ந்து மீண்டும் மீண்டும் ஏற்படும்பொழுது மனதில் ஒரு சலவை ஏற்பட்டு மாற்றங்கள் நிகழ்கின்றன. அல்லது சுய சிந்தனை செய்து தீர்மானங்கள் எடுக்கும் பயிற்சி மனதிற்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களில் மாற்றங்களுக்கு வழி கிடைக்கிறது.
இளமை பருவம் முடியும்வரையில் வசதிகளும் ஆடம்பரங்களும் என்னவென்று உணராமல் மனம் பக்குவப்பட்டுவிட்டால் பின்னர் புத்தி பணத்தின் வழியே செல்லும் வாய்ப்பு குறைவு.
இதற்கு பழங்காலத்தில் அமைந்த குருகுல வாசம் பயன்பட்டது. வீட்டில் இருந்து விலகி இருந்து ஆன்மீக வழியில் மனதை பக்குவப்படுத்தும் கல்வி முறை அது. வசதிகளையும் ஆடம்பரங்களையும் அறியாது அடக்கம் மரியாதை உழைப்பு முதலானவற்றை கற்றுக்கொடுத்த முறை அது. இந்த வழியில் பக்குவப்பட்ட மனம் பின்னர் இந்த வழியில் இருந்து விடுபடுவது கடினம். இந்த வளர்ப்பு முறையில் புத்தி மனதை சரியான வழியில் பக்குவப்படுத்தி அதன் சிந்தனை வழி அறிவுறுத்தல்படி நடக்கும்.
இன்றைய நிலை அதுவல்ல. எல்லாவிதமான வசதி சௌகரியங்கள் ஆடம்பரங்களை அனுபவிக்கும் இளைமைக்காலம். அல்லது பிறர் அனுபவித்து மகிழ்வதைக் கண்டு வளரும் இளமைக்காலம். இளமை காலத்திலேயே விதவிதமான உணவுப்பழக்கங்களுக்கு அடிமைப்பட்டுப் போதல். உழைப்பை அறியாமல் வளருகின்ற நிலை. சிறிது தூரம் நடக்கும் அளவுக்குக்கூட உடல் உழைப்பின்றி வாகனத்தில் பள்ளிக்குப்போகும் நிலை. பணத்தின் பலம் மனதில் ஆழமாகப் விடும் நிலை.
உண்மையான ஆன்மீகத்தைப்பற்றியோ மனதின் முக்கியத்துவத்தைப் பற்றியோ எந்தவிதமான கல்வியும் அவர்களுக்கு கிடைப்பதில்லை. வளரும் ஒவ்வொரு நிலையிலும் பணத்தின் முக்கியத்துவத்தை மீண்டும் மீண்டும் உணறுகிறார்கள். அதன் தேவையே வாழ்க்கையில் முக்கியம் என்று கொள்கிறார்கள். இங்கு புத்தி மனதிற்கு பணத்தின் முக்கியத்துவத்தையும் அதனை தேடும் அவசியத்தையும் எடுத்து சொல்லி அந்த வழியில் அதனை பக்குவப்படுத்துகிறது.
வாழ்வின் வசதிகளும் ஆடம்பரங்களும் இன்பங்களும் அமைய பணம் காரணமாக அமைகிறது. அதனால் பணம் புத்தியை இயக்கி மனதை தன கட்டுக்குள் கொண்டு வந்து விடுகிறது. பின்னர் மனம் ஆன்மாவைப்பற்றியே சிந்திப்பதில்லை. அதனிடமிருந்து விலகி விடுகிறது. பணத்தைப் பெருக்கும் வழிமுறைகளை மட்டுமே சிந்தித்து அதன் வழி நடக்கிறது.
அடிப்படையில் மனம் ஆன்மாவிற்கு கட்டுப்பட்டது. ஆனாலும் உடலெடுத்த பிறகு ஆன்மாவிற்கு சுய இயக்கம் இல்லை. மனம் வழியாகவே ஆன்மா இயங்குகிறது. ஆனால் மனம் ஆன்மாவிடமிருந்து( தன் விதியைத்தவிர வேறு) எந்த பதிவையும் கொண்டு வருவதில்லை. உலக அனுபவத்தின் அடிப்படையிலேயே பதிவுகள் மனதில் ஏற்படுகின்றன.
நமது கோவில்களில் மனதை சரியான வழியில் பக்குவப்படுத்தும் எந்த போதனைகள் கிடைப்பதில்லை. வழிபாடுகள் பணத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகின்றன. வழிபாடுகள் வெறும் சம்பிரதாய சடங்குகளாக மாறிவிட்டன. இதிகாச, புராணக்கதைகள் நம் மனதில் எந்தவிதமான நேர்மறை எண்ணங்களையோ சிந்தனைகளையோ உருவாக்குவதில்லை. மாறாக மனோதத்துவ அடிப்படையில் ஆழ் மனதில் எதிர்மறையான பதிவுகளை ஏற்படுத்துகின்றன. உதாரணத்திற்கு ஒரு புராணக்கதையை ஒரு தெய்வம் தன நோக்கத்தை நிறைவேற்ற தவறான வழியையும் கீழ்த்தர சூழ்ச்சியையும் பயன்படுத்துகிறது என்று வைத்துக்கொள்வோம். தெய்வமே பின்பற்றுகிற ஒரு வழியை நாமும் கடைப்பிடிப்பதில் எந்த தவறும் இருக்க முடியாது என்ற பதிவு மனதில் உண்டாகிறது.
பணத்தின் கட்டுப்பாட்டில் புத்தி இருக்கும் நிலையில் இயங்கும் மனம் அந்த புத்திக்கு இணங்கி நடப்பதற்கு பக்குவப்பட்டுப் போகிறது. ஆனாலும் தன் மூலதத்துவமாகவும் அடிப்படை இணையாகவும் இருக்கும் ஆன்மாவின் உணர்வும் அடி மட்டத்தில் பிறவியிலேயே உறைந்து கிடப்பதால் நம்மை அறியாமல் மனதின் அடித்தளத்தில் தொடர்ந்து ஒரு போராட்டம் நடை பெற்றுக்கொண்டே இருக்கிறது.. ஆன்மாவின் கட்டுக்குள் இயங்கி புத்தியை கட்டுப்படுத்துவதா அல்லது பணத்திற்கு அடிமைப்பட்ட புத்தியின் வழியில் செல்வதா என்ற போராட்டம். முடிவில் பணமே வெல்லும் . இயற்கை யிலேயே எதிர்மறை சக்திகளுக்கே வலு அதிகம் என்பதால் பணமே வெல்கிறது. ஆனாலும் ஆழ்மனப் போராட்டம் தொடரும்; இது தான் நமது மன இறுக்கத்திற்கு காரணமாக அமைகிறது.
காரணம் மனம் இயற்கையில் ஆன்மாவிற்குச் சொந்த மானது . அதனால் அந்த தொடர்பில் இருந்து அதனால் முற்றிலுமாக விடுபட முடியாது. அதனால் மனதில் இறுக்கம் ஏற்பட்டு அதன் பிரதிபலிப்பு உடலில் ஏற்பட்டு நோய்கள் ஏற்பட காரணமாகி விடுகின்றன.
இந்தக் காலத்தில் பணத்தின் தாக்கத்தில் இருந்து விடுபட்டு, வேறுபட்ட நிலைப்பாட்டில் ஓட்டுவனால் வாழ முடியுமா? எப்படி தாரணம் செய்து வாழ்வது? மனப் போராட்டத்தை எப்படி குறைப்பது? இந்த மாதிரியான சிந்தனைகளுடன் வேறொரு பதிவில் சிந்திப்போம். பொறுமையுடன் படித்ததற்கு நன்றி, வணக்கம்.