ஞாயிறு, 2 டிசம்பர், 2018

தெய்வம் - கடவுள் : என்ன வேறுபாடு - ஓர் விளக்கம் Deity - God : An Explanation



தெய்வம்  - கடவுள்   :   என்ன வேறுபாடு.  ஓர் விளக்கம்  Deity - God   An Explanation

ஆத்மா தன் வளத்தை அல்லது சக்தியை அதிகரித்து வலுப்படுவதற்காகவே உடலெடுக்கிறது. அது வளப்படும்பொழுது அதன் சக்தி அதிகரிக்கிறது.    ஆத்மா வலுவிழக்கிறபொழுது அதன் சக்தி குறைகிறது.   ஆத்மா வலுப்பெற வலுப்பெற அதன் சக்தி அதிகரிக்க அதிகரிக்க பூமியின் ஈர்ப்பு விசையில் இருந்து அது கொஞ்சம் கொஞ்சமாக விடுபடுகிறது. 

ஜென்மம் ஜென்மமாக ஒரு ஆத்மா தான் எடுக்கும் ஒவ்வொரு உடலில் இருந்து  ஒவ்வொரு முறையும் வலுப்பெற்று   வெளியேறுந்தோறும் அது இந்த பூமியின் உபரி தளத்தில் இருந்து விலகி விலகிச் செல்கிறது.   இப்படி ஆத்மா முற்றிலுமாக பூமியின் ஈர்ப்பு சக்தியில் இருந்து விடுபட்டு அப்பால் செல்லும்பொழுது அது பிறவி எடுப்பதிலிருந்து விடுபடுகிறது .  அந்த ஆத்மா தெய்வத்தன்மை அடைகிறது.  அது தெய்வமாக மாறுகிறது.   தெய்வங்கள் வாழ்கின்ற புவி ஈர்ப்பு விசைக்கு அப்பாற்பட்ட இந்த  இடம் தான்  விண்ணுலகம். 

பூமி என்பது மண்ணுலகம்.

பிறவி எடுப்பதிலிருந்து விடுபட்ட இந்த ஆத்மாக்களைத்தான் நாம் கோவிலில் சிலைகளாக உருவகப்படுத்தி தெய்வங்கள் ஆக வழிபடுகிறோம்.

ஒன்றை கவனிக்கவும்.     நாம் கோவில்களில் தெய்வம் இருப்பதாகத்தான் சொல்கிறோமே தவிர கடவுள் இருப்பதாக சொல்கிற வழக்கமில்லை.  அதாவது இங்கு கடவுள் என்ற வார்த்தையை ப யன்படுத்துகிற வழக்கம்  இல்லை.   அதாவது கோவிலில் இருப்பது தெய்வம் என்கிற உணர்வு பழையகாலத்தில் இருந்தே நம் உணர்வில் இருந்து வந்திருக்கிறது என்பது தான் உண்மை.  தெய்வம் என்கிற வார்த்தையை நாம் இன்று பயன் படுத்தினாலும் அந்த உணர்விலிருந்து  நாம் தற்போது விடுபட்டு குழப்ப மடைந்த நிலையில் இருக்கிறோம்.      தவறுதலான புரிதலுக்கு உட்பட்டு  இருக்கிறோம்.

வழிபடுகிறோம் என்கிற வார்த்தையை நன்றாக கவனிக்கவும்.   அதன் பொருள்  என்ன?   ஆராதிக்கிறோம் என்பது வேறு.   வழிபடுகிறோம் என்பது வேறு.   நீ எவ்வழி நானும் அவ்வழி  என்பது தான் வழிபடுகிறோம் என்பதன் பொருள்.    நீ எந்த வழியில் செயல்பட்டு பூமியில்  பிறவி எடுப்பதில் இருந்து விடுபட்டாயோ  அந்த வழியை நானும் பின்பற்றி செயல்பட்டு முக்தி பெற முயல்கிறேன் என்பதுவே இதன் விளக்கம்.


கடவுள்:  நம் கட்டுக்குள் அடங்காத ஒன்று.   

கடவுள்:  நம் உணர்வுக்கு அடங்காத ஒன்று.     

கடவுள்: நம் கற்பனைக்கு அப்பாற்பட்ட ஒன்று. 

ஆனால்  கடவுள் என்கிற ஒரு சக்தியின் கட்டுக்குள் நாம்அடங்கி இருக்கிறோம் என்பது தான் உண்மை.

கடவுள் என்கிற சக்தியை நம்மால் பிடித்து அடக்க இயலாது.  அது இந்த பிரபஞ்சத்தில் எங்கும் நிறைந்து இருக்கின்றது.   அதனை பார்க்க இயலாது. உணர மட்டுமே இயலும்.  அதனை உணர நாம் உள் (முகமாக )கடந்து செல்லவேண்டும். இந்த பிரபஞ்சத்தின் உள்ளே கடந்து செல்லவேண்டும். இந்த பிரபஞ்சத்தில் உள்ளடங்கியிருக்கும் ஒவ்வொன்றினுள்ளும் கடந்து செல்லவேண்டும்.   இந்த பிரபஞ்சத்தின் தனிப்பிரதியாக அமைந்திருக்கும் நம் உடலினுள் கடந்து செல்லவேண்டும்.   நம் உடலினுள் நாம் கடந்து செல்லுந் தோறும்  நாம் கடவுளை உணர்ந்து கொள்ள  இயலும்.

கட  உள் .    உட்புறமாக கடந்து சென்றால் அப்பொழுது  நாம் கடவுளை உணர்ந்து கொள்ளலாம்

கடவுளை உணர்ந்து கொள்ள தெய்வங்கள்  வழிகாட்டும்.   தெய்வங்களுடன் உணர்ச்சி பூர்வமாக  ஈடுபடாமல்  உணர்வு லயத்துடன் வழிபடுங்கள் .  உணர்ச்சிகள் வெறியூட்டும்.       உணர்வுகள் வழிகாட்டும்.   வெறும் அர்ச்சனைகள்  ஆராதனைகள் பூஜை புரஸ்காரங்கள் எல்லாம் நம் உணர்ச்சிகளின் வெளிப்பாடே. தெய்வங்களுக்கு திருமணம் நடத்தி  வைப்பது உட்பட.    இதனால் எல்லாம் எந்த ஆன்மீக வளர்ச்சியும் உயர்வும் ஏற்படப்போவதில்லை.

மனதை ஒருமுகப்படுத்த உடலின் உள்முகமாக பார்வையை தளராது செலுத்துங்கள்.  உங்களால் அப்பொழுது மட்டுமே கடவுளை உணர்ந்து கொள்ள முடியும்.

இந்தியாவில் மிக மிக பழைய காலகாலங்களில் சமண கோட்ப்பாடுகள் தான் பழக்கத்தில் இருந்தன.    அதனை ஒரு மதம் என்று கூற முடியாது.  அது அன்றைய வாழ்க்கை கலாச்சாரம்.  எப்படி வாழவேண்டும் என்ற வழிமுறைகள் தான் அவைகள்.    ஆத்மாவைப்பற்றிய அறிவு தான் அடிப்படையாக இருந்தது.     ஆத்மாவை பிறப்பு இறப்பு என்கிற சுழற்சியில் இருந்து  விடுவித்தல் என்பதுதான் நோக்கமாக  இருந்தது.    பிறப்பு இறப்பு சுழற்சியில் இருந்து விடுபட்ட ஆத்மாக்கள் தான் சித்தர்கள்.    சித்தர்கள் தான் வழிகாட்டும் தெய்வங்களாக கோவில்களில் சிலைகளாக உருவகப்படுத்தப்  பட்டிருக்கிறார்கள்.

சித்தர்கள் சமண வழி வந்த, ஆன்மீகத்தில் உயர்நிலையை அடைந்தவர்கள் மக்களுக்கு நல்வழி காட்டியவர்கள்.  மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு சொன்னவர்கள்.   அவர்களது நோய்க்கு மருந்து கண்டவர்கள்.  இவர்கள் சமணர் வழி வந்த புண்ணிய ஆத்மாக்கள்.








1 கருத்து:

  1. கடவுளை மனிதனால் காண முடியும்.
    தியானம் மூலம் பேரோளியான கடவுளை காணலாம்.
    1தவம் செய்தால் சிவம் வரும்.
    2.இருள்நீக்கி இன்பம் பயக்கும் மருள்நீக்கி
    மாசறு காட்சி அவர்க்கு.

    பதிலளிநீக்கு