ஞாயிறு, 14 அக்டோபர், 2018

Chanting and Spiritual uplift -3-How to select a manthra and practice மந்திர உச்சாடனம்: ஆன்மீக உணர்வு -3- மந்திரத்தை தேர்ந்தெடுப்பது எப்படி?

Chanting and Spiritual uplift -3-How to select a manthra and practice  மந்திர உச்சாடனம்: ஆன்மீக உணர்வு -3-   மந்திரத்தை தேர்ந்தெடுப்பது எப்படி?

நம் சக்தி மண்டலம் அதிர்வுகளால் உருவாகும்  அலை வடிவில் இருக்கிறது. பிரபஞ்சம் முழுவதும் நிறைந்து இருப்பது ஓம் என்னும் ஓங்காரமாகிய ஓசை தான்.  காற்று ஓங்கி வீசும்போதும் மழை பொழியும்போதும் கடலில் அலைகள் ஓங்கி எழுந்து அமரும்போதும் நெருப்பு வேகமாகப் பரவும்போதும் ஓம் என்னும் ஓங்காரமே மிஞ்சி நிற்கிறது.   இந்த ஓங்காரத்தின் பிரதிபலிப்பை நமது சக்திமண்டலத்தில் கொண்டுவந்து நிறுத்தப் பழகுவதற்கு மந்திர உச்சாடனம் பயன்படுகிறது.   நமது சக்தி மண்டலத்தில் ஓம் நிலை நிறுத்தப் படும் போது தான் நாம் முக்தி அடைகிறோம்.

எளியமுறையில் ஜபம் எப்படி பழகுவது?   ஒரு குருவைத்தேடி அவரிடம் ஒரு மந்திரம் தீக்ஷை பெற்று அதை உட்க்கொள்ள சிரமப்பட்டு முயன்று தோற்கும் போதும், பின்னர் மனம் தளர்ந்து இது இவ்வளவு கஷ்டமா என்று நொந்து இதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது என்று தீர்மானிக்கும் போதும்  வருத்தத் துடன் விலகிக்கொள்வதா?

இந்த கட்டுரையை முழுவதுமாக கடைசிவரையில் படியுங்கள்.   இறுதியில் தான் இதன் நோக்கத்தையும் உங்களுக்கு ஏற்படும் பயனையும் உணர முடியும்.          தொடர்ந்து படிக்க இந்த  வலைத்தளத்தை 'பின்தொடர் ' என்பதில் கிளிக் செய்து follow செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இதற்காக நாம் எந்த வேதத்தையோ புராணத்தையோ  சித்தாந்தத்தையோ கற்கவோ கேட்கவோ செய்து மனதை குழப்பிக்கொள்ளத் தேவை இல்லை.
இவை எல்லாம் நம் மனதில் குழப்பத்தையே ஏற்படுத்தும்.

ஒரு குரு என்பவர் ஆன்மீகத்தில் உன்னத நிலையை எய்தியவராக இருக்க வேண்டும்.    அவரை சுற்றி திறம்பட்ட சக்தி மண்டலம் அமைந்து தன் முன் நிற்பவரின் சக்தி மண்டலத்தில் ஊடுருவி சலனத்தை ஏற்படுத்தும் நிலையை எட்டியவராக அவர்  இருக்கவேண்டும்.    அப்பொழுது தான் நாம் தீக்ஷை பெற்ற மாத்திரத்தில் தீக்ஷை பெற்ற மந்திரத்தை நம்  சக்திமண்டலத்தில் நிறுவப்பெறுகிறோம்.   அதன் பின்னர் எந்த சிரமமும் இல்லாமல் நம்மால் மந்திர உச்சாடனம் செய்ய்ய முடியும்.      இப்படியான நிலையை எய்திய ஒரு குரு இந்த காலத்தில் கிடைப்பது என்பது கடினம்;  அரிதினும் அரிது .   அப்படிப் பட்ட ஒரு குருவை அடைய நாம் புண்ணியம் செய்திருக்கவேண்டும்.   அணிந்திருக்கும் பக்தி சின்னங்களால் அல்லது வெளிட்டதோற்றத்தால் அல்லது பேச்சால் அல்லது வேஷத்தால் ஒரு திறம்பட்ட  குருவை அடையாளம் காண்பது அரிது.   எங்கும் போலிகள்நிறைந்து இருக்கும் காலம் இது. 

இதற்கு நாம் என்ன செய்யவேண்டும். 

நம் உணர்வுகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். எதிலும் நிதானத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.   மனதை நிலை நிறுத்திப்  பழகவேண்டும். எதற்காகவும் ஒருபொழுதும் உணர்ச்சி வசப்படக்கூடாது.     உணர்ச்சி வசப்படுதல் நம்மை தவறான வழியில் நடத்திச் சென்று நம்முள் ஒரு வெறித்தனத்தை ஏற்படுத்திவிடும்;  ஒரு விதமான விகாரத்தை ஏற்படுத்திவிடும்.  பக்தியின் வெளிப்பாடாக இந்த மாதிரியான வெறித்
தனமான விளைவைத்தான் நாம் மக்களிடம் பார்த்துவருகிறோம்.   இது நம்மை ஆன்மீக அதாவது ஆத்மாவை உணர்வதற்கான நம் முயற்சி அல்லது வழியிலிருந்து வெகுதூரம் விலக்கி விடும்.    காலா காலங்களில்  தவறான விளக்கங்களுடன் தவறான மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்ட சம்பிரதாயங் களையும் பழக்கவழக்கங்களையும் இறுகப்பற்றிக்கொண்டு நாம் ஆன்மீகத்தில் எந்த வளர்ச்சியையும் அடைய இயலாது.   எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்பதற்கு இணங்க எதையுமே சிந்தித்து நம் மனதிற்கு சரி எனப்பட்ட தீர்மானத்தையே எடுக்கவேண்டும்.  மாற்றம் வளர்ச்சிக்கு அறிகுறி.   எது சரி என்று எப்போது தோன்றுகிறதோ அப்பொழுதே தேவையான மாற்றத்தை நம் சிந்தனை ஓட்டத்திலும் நடவடிக்கைகளிலும் ஏற்படுத்திக்கொள்ளவேண்டும்.    யாரிடமும் அடிமையாக சேர்ந்துவிடக்கூடாது.    உபதேசங்களை அமைதியாக கேட்டுக்கொள்ளலாம்.   சுயமாக சிந்தித்து உணர்வு பூர்வமாக தேவையான மாற்றங்களுடனோ அல்லாமலோ ஏற்றுக்கொள்ளவோ தள்ளவோ செய்யலாம்.    அதற்குரிய பக்குவம் நிச்சயமாக உங்களுக்கு  பழக்கத்துக்கு வந்து விடும்.

மிக மிக எளிமையாக மந்திர உச்சாடனத்தை தொடங்கலாம்.   ஒரே ஒரு மெய் எழுத்து மூலமாக.   ஒருவருக்கு வலி வேதனை வரும்பொழுது தாங்க முடியாத நிலையில் வலிக்குதே என்று சொல்லி  ம்...............  என்று முனங்குகிறார்.   இது இயற்கையாக ஏற்படுகிறது,   இந்த முணக்கத்தில் ஒரு கணம் வேதனை மட்டுப்படுகிறது.   இந்த ம்......... என்கிற ஓசை அவரது சக்தி மண்டலத்தில் ஏற்படுத்துகிற ஒரு மாற்றமே இதற்கு காரணம்.   உச்சரித்த நொடியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திய இந்த மெய்த்தொடர் முழக்கம்  தொடர்ந்து பழகி வரும்பொழுது எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது தெளிவு.     உச்சாடனத்தின் அதிர்வுகளை உங்கள் உடலின் ஒவ்வொரு புள்ளியிலும் உணரமுடியும்

வாயை நன்றாக மூடிக்கொண்டு ம்.............என்று தொடர்ந்து ஒலி  எழுப்பும் பொழுது அந்த ஓசை மூக்கு வழியாக வெளிவருகின்றது.   அத்துடன் நாம் சுவாசித்து உட்கொண்ட காற்றும் வெளியேறுகிறது    முடிந்தவரை தொடர்ந்து இப்படி உச்சரிக்கும்போது நமது நுரையீரலில் இருந்து அசுத்த காற்று முழுவதுமாக வெளியேற்றப்படுவதால்  நமது நுரையீரல்  முழுவதுமாக காலி ஆகிறது.   உடன் நமது மார்பு சுருங்குகிறது.    தொடர்ந்து ம்............... என்று நாம் உச்சரிக்கவேண்டுமானால் தேவையான அளவுக்கு நுரையீரல் முழுவதும் நிறையும் அளவுக்கு காற்று சுவாசித்து உள்ளிழுக்க வேண்டும்.    ம் ...............
என்று கூடுதல் நேரம் உச்சரிக்கவேண்டுமானால் கூடுதல் நேரம் மூச்சுக் காற்று  வெளியேற வேண்டும்.   கூடுதல் காற்று வெளியேற வேண்டுமானால் கூடுதல் காற்று உள்ளிழுக்கப்படுதல் அவசியம். ஆகவே நாம் கூடுதல் காற்றை உள்ளுக்கு இழுப்போம்.    நமது மார்பு அந்த அளவிற்கு விரிவடையும்.  பயிற்சியின்போது மார்பு நன்றாக சுருங்கி விரியும்.     மூச்சு வெளியேறி அடுத்த மூச்சு உள்ளிழுக்க ஒன்றிரண்டு நொடிகள் அவகாசம் கொடுங்கள்.    இந்த நொடிகளில் நுறையீரல் அடுத்த சுவாசத்தை கிரகிக்க  தயாராகி விடும். நுரையீரல் மிகவும் நிதானமாக இயங்கக்கூடிய, இயங்கவேண்டிய  உறுப்பு.    இது உடல் ஆரோக்கியத்திற்கு குறிப்பாக இருதயத்திற்கு நல்லது.

ஆரம்பத்தில் அமைதியாக ஒரு காற்றோட்டமான இடத்தில்  அமர்ந்து   ஒன்றிரண்டு  நிமிடங்கள் செய்யலாம்.  எந்தவித முயற்சியோ சிரமமோ எடுக்காமல் மேற்கொள்ளவேண்டும்.  மூச்சு திணறும் வரையில் நீட்டக்கூடாது.    படிப்படியாக உச்சரிக்கும் நேரத்தை அதிகரிக்கலாம்.
ம்....... என்று நிதானமாக பதட்டம் திடுக்கமின்றி உச்சரிக்கும்போது நம்மை அறியாமல் காற்று மெதுவாக நிதானமாக வெளியேறுகிறது. காற்று வெளியேறி தீரும் பொழுது உச்சரிப்பை நிறுத்தி காற்றை மெதுவாக நிதானமாக உள்ளிழுக்கவேண்டும்.  இங்கு நாம் அறியாமலேயே ஒரு மூச்சுப்பயிற்சிக்கு உட்படுகிறோம்.     மூச்சுப்பயிற்சி நம்முடைய எந்த முயற்சியும் இன்றி சரியான முறையில் சீராக நடக்கும்.  இது தான் பிராணாயாமப்  பயிற்சி.    படிப்படியாக நேரத்தை கூடுதலாகி 15 நிமிடம் முதல் அரை மணி நேரம் வரையில் செய்வது நல்லது.    தொடர்ந்து செய்துவரும்போது உச்சரிக்கும் நேரம் அதாவது மூச்சை வெளியேற்றும் நேரம் அதிகரித்துக்கொண்டே வரும்.       அதனால் நாம் உள்ளிழுக்கும் காற்றின் அளவும் அதிகரிக்கும்.   ஒருநிமிடத்தில் நாம் விடும் மூச்சின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வரும்.    நீங்கள் அநேகமாக அறிந்திருப்பீர்கள்: ஒரு நிமிடத்தில் நாம் விடும் மூச்சின் எண்ணிக்கை குறையும்தோறும் நம் ஆரோக்கியம் பலமடைந்து ஆயுள் அதிகரிக்கும்.

தொடர்ந்து சிலபல நாட்கள் மாதங்கள் பழகிவரும்போது,  ம்............. எனும் உச்சாடனம் மிகச் சாதாரணமாக எப்பொழுது வேண்டுமானாலும் உங்களுக்கு வரும்.  சும்மா அமர்ந்து இருக்கும்பொழுது வரலாம். கார் ஓட்டும்போது வரலாம். மகிழ்ச்சியாக இருக்கும்போது வரலாம்.   நீண்ட தூர பயணத்தின் போது வரலாம்.    எப்பொழுது வேண்டுமானாலும் நீங்கள் பயிற்சி செய்யலாம்.   ஒலியை சற்று குறைத்துக் கொள்ளலாம்.     தொடர்ந்து நீங்கள் உச்சரிக்கும் போது மகிழ்ச்சியும் இணைந்தே வரும் என்பதை உணரலாம். உச்சரிக்கும் போது ஓசையில் இசையும் வரும்   இசையோடு ரசித்து உச்சரிக்கும் போது ஓம் என்னும் ஓசை உங்களைச்சுற்றி ரீங்காரமிடும்.  அதீதமான உணர்வுக்கு ஆளாவீர்கள்.   சொல்லி உணர்த்த இயலாது.   ஆனால் அனுபவித்து உணர்ந்துகொள்வீர்கள்.       இப்பொழுது ஆன்மீகத்தில்  அதாவது ஆத்மாவை உணரும் முயற்சியில் முதல் படியைத் தாண்டிவிடுவீர்கள்.

இப்பொழுது மெய் எழுத்தை உயிர்முதல் எழுத்தாக அ .......................... என்று மாற்றிக்கொள்ளலாம்.      இப்பொழுது நாம் ஆன்மீகத்தில் மேல் நோக்கி உயரத் தொடங்குகிறோம்.     அ ..............என்று உச்சாடனம் செய்யும்பொழுது உங்கள் உணர்வில் இந்த மாற்றம் புலப்படும்.

இது இந்த விஷயத்தின் முடிவல்ல.     இன்னும் நிறைய இருக்கின்றன.  இதன் தொடர்ச்சி இன்னும் வளரும்.     தொடர்ந்து பார்ப்போம்.   நன்றி வணக்கம்,






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக