ஞாயிறு, 14 அக்டோபர், 2018

Chanting and Spiritual uplift -3-How to select a manthra and practice மந்திர உச்சாடனம்: ஆன்மீக உணர்வு -3- மந்திரத்தை தேர்ந்தெடுப்பது எப்படி?

Chanting and Spiritual uplift -3-How to select a manthra and practice  மந்திர உச்சாடனம்: ஆன்மீக உணர்வு -3-   மந்திரத்தை தேர்ந்தெடுப்பது எப்படி?

நம் சக்தி மண்டலம் அதிர்வுகளால் உருவாகும்  அலை வடிவில் இருக்கிறது. பிரபஞ்சம் முழுவதும் நிறைந்து இருப்பது ஓம் என்னும் ஓங்காரமாகிய ஓசை தான்.  காற்று ஓங்கி வீசும்போதும் மழை பொழியும்போதும் கடலில் அலைகள் ஓங்கி எழுந்து அமரும்போதும் நெருப்பு வேகமாகப் பரவும்போதும் ஓம் என்னும் ஓங்காரமே மிஞ்சி நிற்கிறது.   இந்த ஓங்காரத்தின் பிரதிபலிப்பை நமது சக்திமண்டலத்தில் கொண்டுவந்து நிறுத்தப் பழகுவதற்கு மந்திர உச்சாடனம் பயன்படுகிறது.   நமது சக்தி மண்டலத்தில் ஓம் நிலை நிறுத்தப் படும் போது தான் நாம் முக்தி அடைகிறோம்.

எளியமுறையில் ஜபம் எப்படி பழகுவது?   ஒரு குருவைத்தேடி அவரிடம் ஒரு மந்திரம் தீக்ஷை பெற்று அதை உட்க்கொள்ள சிரமப்பட்டு முயன்று தோற்கும் போதும், பின்னர் மனம் தளர்ந்து இது இவ்வளவு கஷ்டமா என்று நொந்து இதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது என்று தீர்மானிக்கும் போதும்  வருத்தத் துடன் விலகிக்கொள்வதா?

இந்த கட்டுரையை முழுவதுமாக கடைசிவரையில் படியுங்கள்.   இறுதியில் தான் இதன் நோக்கத்தையும் உங்களுக்கு ஏற்படும் பயனையும் உணர முடியும்.          தொடர்ந்து படிக்க இந்த  வலைத்தளத்தை 'பின்தொடர் ' என்பதில் கிளிக் செய்து follow செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இதற்காக நாம் எந்த வேதத்தையோ புராணத்தையோ  சித்தாந்தத்தையோ கற்கவோ கேட்கவோ செய்து மனதை குழப்பிக்கொள்ளத் தேவை இல்லை.
இவை எல்லாம் நம் மனதில் குழப்பத்தையே ஏற்படுத்தும்.

ஒரு குரு என்பவர் ஆன்மீகத்தில் உன்னத நிலையை எய்தியவராக இருக்க வேண்டும்.    அவரை சுற்றி திறம்பட்ட சக்தி மண்டலம் அமைந்து தன் முன் நிற்பவரின் சக்தி மண்டலத்தில் ஊடுருவி சலனத்தை ஏற்படுத்தும் நிலையை எட்டியவராக அவர்  இருக்கவேண்டும்.    அப்பொழுது தான் நாம் தீக்ஷை பெற்ற மாத்திரத்தில் தீக்ஷை பெற்ற மந்திரத்தை நம்  சக்திமண்டலத்தில் நிறுவப்பெறுகிறோம்.   அதன் பின்னர் எந்த சிரமமும் இல்லாமல் நம்மால் மந்திர உச்சாடனம் செய்ய்ய முடியும்.      இப்படியான நிலையை எய்திய ஒரு குரு இந்த காலத்தில் கிடைப்பது என்பது கடினம்;  அரிதினும் அரிது .   அப்படிப் பட்ட ஒரு குருவை அடைய நாம் புண்ணியம் செய்திருக்கவேண்டும்.   அணிந்திருக்கும் பக்தி சின்னங்களால் அல்லது வெளிட்டதோற்றத்தால் அல்லது பேச்சால் அல்லது வேஷத்தால் ஒரு திறம்பட்ட  குருவை அடையாளம் காண்பது அரிது.   எங்கும் போலிகள்நிறைந்து இருக்கும் காலம் இது. 

இதற்கு நாம் என்ன செய்யவேண்டும். 

நம் உணர்வுகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். எதிலும் நிதானத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.   மனதை நிலை நிறுத்திப்  பழகவேண்டும். எதற்காகவும் ஒருபொழுதும் உணர்ச்சி வசப்படக்கூடாது.     உணர்ச்சி வசப்படுதல் நம்மை தவறான வழியில் நடத்திச் சென்று நம்முள் ஒரு வெறித்தனத்தை ஏற்படுத்திவிடும்;  ஒரு விதமான விகாரத்தை ஏற்படுத்திவிடும்.  பக்தியின் வெளிப்பாடாக இந்த மாதிரியான வெறித்
தனமான விளைவைத்தான் நாம் மக்களிடம் பார்த்துவருகிறோம்.   இது நம்மை ஆன்மீக அதாவது ஆத்மாவை உணர்வதற்கான நம் முயற்சி அல்லது வழியிலிருந்து வெகுதூரம் விலக்கி விடும்.    காலா காலங்களில்  தவறான விளக்கங்களுடன் தவறான மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்ட சம்பிரதாயங் களையும் பழக்கவழக்கங்களையும் இறுகப்பற்றிக்கொண்டு நாம் ஆன்மீகத்தில் எந்த வளர்ச்சியையும் அடைய இயலாது.   எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்பதற்கு இணங்க எதையுமே சிந்தித்து நம் மனதிற்கு சரி எனப்பட்ட தீர்மானத்தையே எடுக்கவேண்டும்.  மாற்றம் வளர்ச்சிக்கு அறிகுறி.   எது சரி என்று எப்போது தோன்றுகிறதோ அப்பொழுதே தேவையான மாற்றத்தை நம் சிந்தனை ஓட்டத்திலும் நடவடிக்கைகளிலும் ஏற்படுத்திக்கொள்ளவேண்டும்.    யாரிடமும் அடிமையாக சேர்ந்துவிடக்கூடாது.    உபதேசங்களை அமைதியாக கேட்டுக்கொள்ளலாம்.   சுயமாக சிந்தித்து உணர்வு பூர்வமாக தேவையான மாற்றங்களுடனோ அல்லாமலோ ஏற்றுக்கொள்ளவோ தள்ளவோ செய்யலாம்.    அதற்குரிய பக்குவம் நிச்சயமாக உங்களுக்கு  பழக்கத்துக்கு வந்து விடும்.

மிக மிக எளிமையாக மந்திர உச்சாடனத்தை தொடங்கலாம்.   ஒரே ஒரு மெய் எழுத்து மூலமாக.   ஒருவருக்கு வலி வேதனை வரும்பொழுது தாங்க முடியாத நிலையில் வலிக்குதே என்று சொல்லி  ம்...............  என்று முனங்குகிறார்.   இது இயற்கையாக ஏற்படுகிறது,   இந்த முணக்கத்தில் ஒரு கணம் வேதனை மட்டுப்படுகிறது.   இந்த ம்......... என்கிற ஓசை அவரது சக்தி மண்டலத்தில் ஏற்படுத்துகிற ஒரு மாற்றமே இதற்கு காரணம்.   உச்சரித்த நொடியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திய இந்த மெய்த்தொடர் முழக்கம்  தொடர்ந்து பழகி வரும்பொழுது எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது தெளிவு.     உச்சாடனத்தின் அதிர்வுகளை உங்கள் உடலின் ஒவ்வொரு புள்ளியிலும் உணரமுடியும்

வாயை நன்றாக மூடிக்கொண்டு ம்.............என்று தொடர்ந்து ஒலி  எழுப்பும் பொழுது அந்த ஓசை மூக்கு வழியாக வெளிவருகின்றது.   அத்துடன் நாம் சுவாசித்து உட்கொண்ட காற்றும் வெளியேறுகிறது    முடிந்தவரை தொடர்ந்து இப்படி உச்சரிக்கும்போது நமது நுரையீரலில் இருந்து அசுத்த காற்று முழுவதுமாக வெளியேற்றப்படுவதால்  நமது நுரையீரல்  முழுவதுமாக காலி ஆகிறது.   உடன் நமது மார்பு சுருங்குகிறது.    தொடர்ந்து ம்............... என்று நாம் உச்சரிக்கவேண்டுமானால் தேவையான அளவுக்கு நுரையீரல் முழுவதும் நிறையும் அளவுக்கு காற்று சுவாசித்து உள்ளிழுக்க வேண்டும்.    ம் ...............
என்று கூடுதல் நேரம் உச்சரிக்கவேண்டுமானால் கூடுதல் நேரம் மூச்சுக் காற்று  வெளியேற வேண்டும்.   கூடுதல் காற்று வெளியேற வேண்டுமானால் கூடுதல் காற்று உள்ளிழுக்கப்படுதல் அவசியம். ஆகவே நாம் கூடுதல் காற்றை உள்ளுக்கு இழுப்போம்.    நமது மார்பு அந்த அளவிற்கு விரிவடையும்.  பயிற்சியின்போது மார்பு நன்றாக சுருங்கி விரியும்.     மூச்சு வெளியேறி அடுத்த மூச்சு உள்ளிழுக்க ஒன்றிரண்டு நொடிகள் அவகாசம் கொடுங்கள்.    இந்த நொடிகளில் நுறையீரல் அடுத்த சுவாசத்தை கிரகிக்க  தயாராகி விடும். நுரையீரல் மிகவும் நிதானமாக இயங்கக்கூடிய, இயங்கவேண்டிய  உறுப்பு.    இது உடல் ஆரோக்கியத்திற்கு குறிப்பாக இருதயத்திற்கு நல்லது.

ஆரம்பத்தில் அமைதியாக ஒரு காற்றோட்டமான இடத்தில்  அமர்ந்து   ஒன்றிரண்டு  நிமிடங்கள் செய்யலாம்.  எந்தவித முயற்சியோ சிரமமோ எடுக்காமல் மேற்கொள்ளவேண்டும்.  மூச்சு திணறும் வரையில் நீட்டக்கூடாது.    படிப்படியாக உச்சரிக்கும் நேரத்தை அதிகரிக்கலாம்.
ம்....... என்று நிதானமாக பதட்டம் திடுக்கமின்றி உச்சரிக்கும்போது நம்மை அறியாமல் காற்று மெதுவாக நிதானமாக வெளியேறுகிறது. காற்று வெளியேறி தீரும் பொழுது உச்சரிப்பை நிறுத்தி காற்றை மெதுவாக நிதானமாக உள்ளிழுக்கவேண்டும்.  இங்கு நாம் அறியாமலேயே ஒரு மூச்சுப்பயிற்சிக்கு உட்படுகிறோம்.     மூச்சுப்பயிற்சி நம்முடைய எந்த முயற்சியும் இன்றி சரியான முறையில் சீராக நடக்கும்.  இது தான் பிராணாயாமப்  பயிற்சி.    படிப்படியாக நேரத்தை கூடுதலாகி 15 நிமிடம் முதல் அரை மணி நேரம் வரையில் செய்வது நல்லது.    தொடர்ந்து செய்துவரும்போது உச்சரிக்கும் நேரம் அதாவது மூச்சை வெளியேற்றும் நேரம் அதிகரித்துக்கொண்டே வரும்.       அதனால் நாம் உள்ளிழுக்கும் காற்றின் அளவும் அதிகரிக்கும்.   ஒருநிமிடத்தில் நாம் விடும் மூச்சின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வரும்.    நீங்கள் அநேகமாக அறிந்திருப்பீர்கள்: ஒரு நிமிடத்தில் நாம் விடும் மூச்சின் எண்ணிக்கை குறையும்தோறும் நம் ஆரோக்கியம் பலமடைந்து ஆயுள் அதிகரிக்கும்.

தொடர்ந்து சிலபல நாட்கள் மாதங்கள் பழகிவரும்போது,  ம்............. எனும் உச்சாடனம் மிகச் சாதாரணமாக எப்பொழுது வேண்டுமானாலும் உங்களுக்கு வரும்.  சும்மா அமர்ந்து இருக்கும்பொழுது வரலாம். கார் ஓட்டும்போது வரலாம். மகிழ்ச்சியாக இருக்கும்போது வரலாம்.   நீண்ட தூர பயணத்தின் போது வரலாம்.    எப்பொழுது வேண்டுமானாலும் நீங்கள் பயிற்சி செய்யலாம்.   ஒலியை சற்று குறைத்துக் கொள்ளலாம்.     தொடர்ந்து நீங்கள் உச்சரிக்கும் போது மகிழ்ச்சியும் இணைந்தே வரும் என்பதை உணரலாம். உச்சரிக்கும் போது ஓசையில் இசையும் வரும்   இசையோடு ரசித்து உச்சரிக்கும் போது ஓம் என்னும் ஓசை உங்களைச்சுற்றி ரீங்காரமிடும்.  அதீதமான உணர்வுக்கு ஆளாவீர்கள்.   சொல்லி உணர்த்த இயலாது.   ஆனால் அனுபவித்து உணர்ந்துகொள்வீர்கள்.       இப்பொழுது ஆன்மீகத்தில்  அதாவது ஆத்மாவை உணரும் முயற்சியில் முதல் படியைத் தாண்டிவிடுவீர்கள்.

இப்பொழுது மெய் எழுத்தை உயிர்முதல் எழுத்தாக அ .......................... என்று மாற்றிக்கொள்ளலாம்.      இப்பொழுது நாம் ஆன்மீகத்தில் மேல் நோக்கி உயரத் தொடங்குகிறோம்.     அ ..............என்று உச்சாடனம் செய்யும்பொழுது உங்கள் உணர்வில் இந்த மாற்றம் புலப்படும்.

இது இந்த விஷயத்தின் முடிவல்ல.     இன்னும் நிறைய இருக்கின்றன.  இதன் தொடர்ச்சி இன்னும் வளரும்.     தொடர்ந்து பார்ப்போம்.   நன்றி வணக்கம்,






சனி, 13 அக்டோபர், 2018

Chanting and Spiritual uplift - Manthras மந்திர ஜபம் எப்படி பலன் தரும் - அதன்அடிப்படை என்ன?

மந்திர ஜபம் எப்படி பலன் தரும்- அதன் அடிப்படை என்ன?

ஒலி அல்லது ஓசை என்பது நமக்கு மிகவும் பரிச்சயமான ஒன்று என்பது சொல்லித்தெறியவேண்டியதில்லை..     ஆனால் ஒலி  என்றால் என்ன ?    இந்த  கேள்விக்கு எப்படி பதில் சொல்வது .   யோசித்துப் பாருங்கள்.  இதனை பார்க்க முடியாது.   கேட்க மட்டுமே முடியும் .இதற்காகவே நமக்கு இரண்டு காதுகள் அமையப்பெற்றிருக்கின்றன.  நமது கருத்து பரிமாற்றங்களுக்கு ஓசையின் வித்தியாசங்கள் அடிப்படையில் அமையும் பேச்சு தான் பயன்படுகிறது.

ஒரு பொருள் அதிரும்பொழுது அது  காற்றில் ஏற்படுத்துகிற அலைகள்  நமது காதுகளின் உள்ளே அமைந்துள்ள செவிப்பறையில் தட்டி அதிர்வை பகிர்கிறது.  அதை ஏற்று நம் செவிப்பறை அதிர்கிறது.   நரம்புகள் மூலமாக இந்த அதிர்வுகள் நம் மூளையை எட்டுகிறது.    அங்கே  ஒலி அடையாளம் காணப்படுகின்றது .  சப்தம் நம் மூளையில் ஒலிக்கிறது.     நன்றாக கவனிக்கவும் அதிர்வு முதலில் எங்கே உண்டானதோ அங்கே ஓசை ஒலிக்கவில்லை.     ஆனால் நம் மூளையில் தான் ஒலிக்கிறது.    இன்னும் தெளிவாகச் சொன்னால் நம்மை சுற்றி அமைந்திருக்கும் நம்முடைய சக்தி மண்டலம் முழுவதிலும்  ஒலிக்கிறது.     அதாவது நமது ஆத்மாவில் ஒலிக்கின்றது என்று சொல்வதே சரியாக இருக்கும். 

முதலில் அதிர்வு உண்டான இடத்தில் அல்லது புள்ளியில் எந்தவிதமான ஓசையும்   உண்டாகவில்லை  என்பது  தான் இங்கே கவனிக்கவேண்டிய ஒன்று.

அதாவது நாம் கேட்கும் ஒவ்வொரு ஒலி யும் நமது சக்தி மண்டலத்தில் மட்டுமே ஒலிக்கின்றது;   சலனத்தை உண்டாக்குகிறது.    இந்த சலனம் நம் உடல் முழுவதிலும் உணரப்பட்டு அதன் பாதிப்பு நமது மனதில் ஏற்படுகிறது.  வெவ்வேறான ஓசைகள் அல்லது சப்தங்கள் நம் மனதில் வெவ்வேறான உணர்வுகளை ஏற்படுத்துகின்றன.    இது முதன் முதலில் நமது சக்தி மண்டலத்திலேயே ஏற்படுகிறது.   அதன் விளைவுகளை அதன் பின்னரே நாம் அனுபவிக்கிறோம்.

நம்  சக்தி மண்டலத்தில் ஏற்படும் மாற்றங்கள் நமது உடலிலும் மனதிலும் மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதே உண்மை.

இந்த அடிப்படையில் தான் மந்திர ஜபம் பயன் தருகிறது.

அதிர்வுகள் ஓசைக்கு காரணமாகின்றன.   ஓசையில் அடிப்படையானது ஓங்காரம்.   வாயு, நெருப்பு,  நீர் ஆகிய மூன்று பூதங்களும் அசையும் தன்மையன.    காற்று வீசும்பொழுது ஓம் என்னும் ஓங்காரம் உண்டாகிறது.   நெருப்பு ஓங்கும்பொழுதும் அதே  ஓம் என்னும் ஓங்காரம் ஒலிக்கிறது.   கடல் நீர் ஆர்ப்பாரிக்கும்பொழுது அதே ஓங்காரம் கேட்கிறது .   ஆகவே ஓங்காரம் என்பது இயற்கையின் ஓசை.   பிரபஞ்சம் எங்கும் எப்பொழுதும் நிறைந்து ஒலிக்கும் ஓசை. 

நம் சக்தி மண்டலத்தில் ஓங்காரத்தை நிலையாக ஒலிக்கச் செய்தால் அது இயற்கையுடன்  இணையும். அது ஓங்காரத்தால் நிறையும்பொழுது  முக்தி அல்லது பிறவி எடுப்பதிலிருந்து விமோசனம் கிடைக்கிறது.    இயற்கையின் ஓசை முழுவதுமாக  நம் சக்தி மண்டலத்தில் நிறையும்பொழுது நாம் முழுவதுமாக நிரந்தரமாக இயற்கையோடு ஒன்றி விடுகிறோம்.    இதுவே முக்தி அல்லது மோக்ஷம் .  இதுவே சொர்க்கம்   சொர்க்கம் என்பது வடமொழிச்சொல்.   அதாவது ஸ்வ வர்க்கம் சொர்க்கம் ஆனது.    நாம் எந்த வர்க்கத்திலிருந்து வந்தோமோ அது தான் ஸ்வ வர்க்கம்.

மந்திரம் பழகிய பிறகு,  வெகு இயல்பாக நாம் உச்சரிக்கும் பொழுது உண்டாகிற ரிதம் அல்லது சுருதி நம் சக்தி மண்டலத்தில் ஓங்கார அலைகளை ஏற்படுத்துகிறது. சக்தி மண்டலத்தில் ஓங்காரம் நிலைபெறும்பொழுது அதன் அதிர்வுகள் அல்லது படபடப்பு குறைகிறது.   இது மனதில் நிதானம் ஏற்படக்காரணமாக அமைகிறது.  தியான நிலைக்கு இது தான் அடிப்படை.

மனது நிதானத்திற்கு வரும்பொழுது நம் மனது நமக்குள் நிறுத்தப்படுகிறது .  நமது சுவாசம் ஒழுங்கு படுத்தப்படுகிறது.    சுவாசம் ஒழுங்காக நடை பெறும்பொழுது அசுத்தக்காற்று முழுவதுமாக நுரையீரலிலிருந்து வெளியேறி தேவையான அளவுக்கு பிராண வாயு அங்கு பிரவேசிக்கிறது.   இரத்தம்  சரியான முறையில் சுத்தம் செய்யப்பட்டு உடல் முழுவதும் சீரான முறையில் ஓடுகிறது.  இவ்விதம் நமது ஆரோக்கியம் சீர் செய்யப்படுகிறது.

நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும்பொழுது நம் சக்தி மண்டலம் நேர் நிலையில் அமைகிறது.    இல்லாதபோது சிதறுபடுகிறது .   உடல் அசுத்தம்  சக்தி மண்டலத்தையும் அசுத்தப்படுத்துகிறது.

நாம் ஒரு ஒலியை உண்டாக்குகிறபொழுது மூச்சை வெளியே விடுகிறோம் .
அடுத்த ஒசையை  நாம் ஒலிப்பதற்குள் நாம் அறியாமலேயே காற்றை உள்ளே இழுத்துக்கொள்கிறோம்     அடுத்த உச்சரிப்பின்போது மீண்டும் காற்று வெளியேறுகிறது.   ஒரே சொல், ஓசை அல்லது மந்திரத்தை திரும்பத்திரும்ப சொல்லும்பொழுது மூச்சு ஒரே சீராக நடைபெறுகிறது . சரியாக சொன்னால் ஒரு பிராணாயாமம் பயிற்சி நடக்கிறது.

இதன் காரணமாகவே நம் சக்தி மண்டலம் சீராகிறது.   தொடர்ந்து  ஜபம் அல்லது உச்சாடனம்  அல்லது அதே ஓசையை மீண்டும் மீண்டும் சிறிது  நேரத்திற்கு  எழுப்புகிற பொழுது  உச்சாடனம் நிறுத்திய பிறகும் தொடர்ந்து  சக்தி மண்டலம் சீரான நிலையில் குறிப்பிட்ட நேரம் வரையில்  நிலைகொள்கிறது.

இது காலை நேரங்களில் தொடர்ந்து  பழகி வரும்பொழுது நமது அன்றாட வேலைகளில் கவனம் சிதறாமல் ஈடுபடவும் நிதானமாக எதையும் பதட்டப்படாமல் எதிர்கொள்ளவும் தீர்மானங்கள் எடுக்கவும் உதவியாக இருக்கும்.         

நன்றி.     வணக்கம்





Five Elements -other elements இதர பஞ்ச பூதங்கள் - உடல் ஆரோக்கியத்துக்கு பயன்படுத்துவது எப்படி ?



Five  Elements -other elements     இதர பஞ்ச பூதங்கள்  - உடல் ஆரோக்கியத்துக்கு பயன்படுத்துவது எப்படி ?

நம் வாழ்க்கையில்  பயனுள்ளதும் தெரிந்து கொள்ளவேண்டியதும் உடல் மனம் ஆரோக்கியத்துக்கு வழிகோலுவதுமான நிறைய விஷயங்கள் இந்த தொடர்களில் விளக்கப்படுகின்றன.    இதனை படிப்பதற்காக சிறிது நேரம் ஒதுக்கி முழுவதுமாக இறுதி வரை படித்து பயன் அடையுங்கள்.   ஆங்கிலத்தில் இருந்தால் மிகவும் அடியில் Tamil என்பதில் கிளிக் செய்தால் தமிழில் படிக்கலாம்.

இந்த தொடரை பின்  தொடருங்கள்.    அதற்காக  இந்தப்பக்கத்தின் வலப்புறம் மேல்பகுதியில்  காணப்படும் "பின்தொடர் " என்பதில் கிளிக் செய்யவும்.   இந்த தொடரில் வரும் அனைத்து கட்டுரைகளையும் அப்பொழுது தான் உங்களுக்கு விடாமல் படிக்க முடியும்.

ஆகாயத்தைப் பற்றி விளக்கமாக முன்னர் ஒரு கட்டுரையில் பார்த்தோம். தொடர்ந்து பிற பூதங்களைப்பற்றியும்  நாம் இப்போது பார்க்கலாம்.


ஆகாயம் இது தான் அடிப்படையான பூதம்.  பூதம் என்பது இங்கு (இயங்கும்) பொருள் என்ற அர்த்தத்தில் தான் கையாளப்படுகிறது.   பேய் பிசாசு என்ற அர்த்தத்தில் அல்ல என்பதை கவனிக்கவும்.    இது இல்லை என்று இருக்கும் ஒன்று.      மற்ற நான்கு பூதங்களும் உருவாக இதுவே காரணமாக அமைகிறது   ஆகாயம் என்பது சிவம்(ன்) என்றும் நாம் முன்னர் விளக்கினோம்.

ஆகாயம் என்பது சீவன். அதாவது உயிர் .   இந்த உயிர் ஆனது  சக்தி என்ற உடலுடன்  இணைகிறபொழுது தான் பிற பூதங்கள் உண்டாகின்றன.

ஆகாயம் பிரபஞ்சம் முழுவதும் நிறைந்து இருக்கிறது.   ஆகாயம் என்பதே பிரபஞ்சம்.    ஆகாயம் முழுவதும் சக்தியால்  நிறைந்து இருக்கிறது    சக்தி என்பது இருவகைப்படும் .   ஒன்று நேர்மறை. மற்றது எதிர்மறை  (Positive charge and negative charge), எலக்ட்ரோன் மற்றும் புரோட்டோன்கள்  (electrons and  protons)

அடுத்த பூதம் காற்று.   ஆகாயத்திலே முதலில் உருவான பூதம்  காற்று அல்லது  வாயு  தான்.

எப்படி?

 பிரபஞ்சத்தில்  அடிப்படையானபொருள் அணு.  எல்லாப்பொருட்களும் அடிப்படையில் அணுக்களால் ஆனது.  அணு நியூட்ரோன், புரோட்டோன், எலக்ட்ரோன் ஆகிய மூன்று மின் காந்தக்கூறுகளால் ஆனது. குவார்க் மற்றும்
 லெப்டன் என்பன இவை உருவாகக்  காரணமாக அமைந்தன.

பிரபஞ்சத்தில் முதலில்  உண்டான அடிப்படைப் பொருள் அணுதான்.  பிரபஞ்சம் உண்டான சில  நிமிடங்களில் ஹைட்ரஜன் வாயுவும் தொடர்ந்து ஹீலியம் வாயுவும் உண்டாயின.    அதீதமான சக்தியால் ஈர்க்கப்பட்டு மின் காந்தக்கூறுகள் ஆகாயத்தில் ஒன்றிணைந்து இவை உருவாகின.

பிரபஞ்சம் ஏற்பட்டு இருபது கோடி வருடங்களுக்கு பிறகு நட்சத்திரங்கள் ஒவ் வொன்றாக உருவாயின.  அப்போது தான் முதன் முதலாக ஒளி அல்லது நெருப்பு உண்டானது .    அப்படி உண்டான ஒரு நட்சத்திரம் தான் சூரியன்.  கற்பனைக்கு எட்டாத அளவிலான எல்லையற்ற ஈர்ப்பு சக்தி உருவாகி ஹைட்ரஜன் அணுக்களை கூட்டத்த்தோடு ஒரு புள்ளியில் குவியச்செய்து அவை கற்பனைக்கு எட்டாத அளவிலான எல்லையற்ற அழுத்தத்தால் மின் காந்தக்கூறுகளாக சிதறுபட்டு  மின் காந்தக்க்கூறுகள்  வேறொரு விகிதத்தில் இணைந்து ஹீலியம் என்ற இன்னொரு வாயுவாக மாறுகிறது.     ஈர்க்கப்பட்ட ஹைட்ரஜன் அணுக்கள் அசுர வேகத்தில் ஒரு புள்ளியில் குவியும்பொழுது ஏற்பட்ட வெடித்து சிதறலில் தான் பூமி மற்றும் கிரகங்கள்  தொலைவில் தெறித்து விழுந்து உருவாயின.    ஹைட்ரஜன் ஹீலியமாக உருத்திரியும்   இந்த செயல் தொடர்ந்து நடக்கிற ஒரு மாபெரும் புள்ளி தான் ஒரு நட்சத்திரம்.  ஹைட்ரஜன் அணு சிதறும்பொழுது அபரிமிதமான சூடும் வெளிச்சமும் உண்டாகிறது.     நட்சத்திரத்தில் குவிந்திருக்கும் அனைத்து ஹைட்ரஜன் அணுக்களும் சிதறி முடியும் பொழுது நட்சத்திரம் அழிந்து விடும்.   சூரியனும் ஒரு நட்சத்திரம் தான்.  அதுவும் ஒருநாள் அழிந்துவிடும்.    ஒரு புழுதி அல்லது மேக மண்டலத்தின் சுழற்சியாகவே ஒவ்வொரு நட்சத்திரமும் -சூரியன் உட்பட - தோற்றமளிக்கும். 

நமது சூரியன் தோன்றி சுமார் நானூற்று ஐம்பது அல்லது நானூற்று அறுபது  கோடி வருடங்கள் ஆகின்றன.

இனி சுமார் ஐநூறு கோடி வருடங்களில் சூரியனில் உள்ள ஹைட்ரஜன் அனைத்தும் சிதறி தீரும்.   அப்பொழுது சூரியன் என்ற மாபெரும் புள்ளி வெறும் தீக்கனலாக மாறி அதிக வெப்பத்துடன் வெடித்து விரிவடையத்தொடங்கும் ;  சூடு ஆறி மிக மிக மெதுவாக குளிரத்தொடங்கும்.     இது பல கோடிக் கணக்கான  வருடங்கள் நடைபெறும்.    சூரியன் விரிவடையத்தொடங்கி குளிரும் செயல் நடக்கும்பொழுது அது முதலில் புதன் சுக்கிரன் ஆகிய கிரகங்களையும் பின்னர் பூமியையும் தன்னுடைய வெப்ப வளையத்தினுள் விழுங்கும்.     இதற்கு எத்தனையோ வருடங்களுக்கு முன்னரே விரிந்து பரவும் சூரியனின் வெப்பத்தை தாங்க முடியாமல் பூமியில் உயிரினங்கள் அழிந்து விடும்.

சூரியன் உருவானபொழுது,  ஈர்க்கப்பட்ட ஹைட்ரஜன் அணுக்கள் அசுர வேகத்தில் ஒரு புள்ளியில் குவியும்பொழுது ஏற்பட்ட வெடித்து சிதறலில் தொலைவில் தெறித்து விழுந்து தான் பூமி மற்றும் கிரகங்கள்  உருவாயின. சூரியன் உருவான ஒருசில நிமிடங்களில் சூரியனில் இருந்து வெடித்து சிதறி  தெறித்து தான் பூமி உருவானது.  பிற கிரகங்களும் இப்படித்தான் உருவாகின.  இவை சூரியனின் ஈர்ப்பு மண்டலத்தினுள் இருப்பதால் சுழற்சியில் இருக்கும் புகை மேக மண்டலமான சூரியனின் சுழற்சியுடன் இணைந்து அதனைச் சுற்றி வருகின்றன.

கடும் வெப்பத்துடன் சூரியனில் இருந்து தெறித்து எறியப்பட்ட பூமி மெதுவாக குளிரத்தொடங்கியது.   அவ்வப்போது ஆங்காங்கே பூமி வெடித்து வெளியேறிய வாயுக்களால் காற்று மண்டலமும் பின்னர் வெப்பமான காற்றில் உருவான வேதியியல் மாற்றங்களால் ஏற்பட்ட  சக்தியால் மின் காந்தகூறுகள் சிதறிப் பிரிந்து இணைந்து குளிர்ந்து மழையாகப் பெய்து நீரும்அதனால் நிறையப்பெற்று கடலும்  உண்டாயின.     இது தான் பஞ்ச பூதங்கள் உண்டான வழி.

மொத்தத்தில் இந்த  பிரபஞ்சம் முழுவதும் ஆகாயம் வாயு நெருப்பு (சூரியன் முதலான நட்சத்திரங்கள் )பூமி (முதலான கிரகங்கள்) இவைகளால் நிறைந்து இருக்கின்றன.

ஆகாயம் பிரபஞ்சம் முழுவதும் எங்கும் நிறைந்து காணப்படுகிறது    வாயுவும் மிகப்பெரிய அளவில்ஹைட்ரஜன் அணுக்களாகவும் சிறிய அளவில் ஹீலியம் அணுக்களாகவும் எங்கும் நிறைந்து இருக்கின்றன.   நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களை சுற்றி இவை வேதியியல் மாற்றங்களுக்கு உட்பட்டு வாயு அல்லது காற்றுவெளி மண்டலமாக பல்வேறு விதமான வாயுக்களுடன்   நிலைபெறுகின்றன.

ஒவ்வொரு நட்சத்திரத்தை சுற்றியும் நெருப்பும் ஒரு மிகப்பெரிய வட்டத்துக்கு அதன் ஒளியும் அதனால் ஏற்படும் வெப்பமும் நிறைந்து இருக்கின்றன.

பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் அடிப்படையில் இந்த ஐந்து பூதங்களாலேயே உருவாக்கப்பட்டிருக்கின்றன.

நம் உடலை எடுத்துக்கொள்வோம்.    ஆகாயத்தின் அம்சம் ஆன வெட்ட வெளியான பகுதி  நம் உடலுக்குள் இருக்கிறது. அது நம் உயிராகவும் இருக்கிறது. 

வாயுவின் அம்சமான பிராண வாயு நம் உடல் முழுவதும் நிறைந்து இருக்கிறது.  நமது இரத்தத்திலும் தசைகளிலும் இதன் அளவு சாதாரணமாக 95 சதவீதத்துக்கு குறையாமல் இருக்கவேண்டும்.    அப்பொழுது தான்  சுவாசம் சீராக நடைபெறும்.     90 சதவீதத்துக்கு குறைகிற பொழுது மூச்சு திணறல் ஏற்படும்.  மிகக்குறையும் பொழுது உயிருக்கே ஆபத்தாக முடியும்.

இரத்தம் , நிணநீர் முதலானவைகள் நீரின் அம்சமாக இருக்கின்றன.

வாயு மண்டலத்தை விட அதிகமான வெப்பம் எப்பொழுதும் நம் உடலில் நிலைகொள்கிறது.   இதில் ஏற்படும் கூடுதல் குறைவுகள் ஆரோக்கியத்துக்கு ஊறு  விளைவிக்கவோ ஆபத்தாக முடியவோ செய்கிறது.

அதாவது பஞ்சபூதங்களின்  அம்சம் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட அளவில்-விகிதத்தில்  நம் உடலில் தேவைப்படுகிறது.  எது எது குறைகிறதோ அதை நிறைவு செய்ய வேண்டியதிருக்கிறது.  எதெது தேவைக்கு அதிகரிக்கிறதோ அதை குறைவு செய்யவேண்டியதிருக்கிறது.

நமது அன்றாட செயல்பாடுகளால் நம் உடலில் பஞ்சபூத அம்சங்களில் குறைவு ஏற்படுகிறது.  இந்த குறைபாடுகளை நாம் எவ்வாறு நிறைவு செய்கிறோம்?

உடல் உழைப்பினால் பூமியின் அம்சம் குறைகிறது. இதை நிறைவு செய்ய அன்றாடம் பூமியிலிருந்து உருவான உணவுகளை தேவையான அளவிற்கு உடலுக்குள் எடுத்துக்கொள்கிறோம்.

உடலுக்குள் இருக்கும் வெப்பத்தை கட்டுப்படுத்த வெயில் உபயோகப் படுகிறது.    இது இயற்கையாகவே நாம் அறியாமலே நடக்கிறது.   இதற்காக நம் உடலில் வெயில் பட வேண்டியதிருக்கிறது.

காற்றும் நீரும் நம் உடல் பராமரிப்பில் பெரும் பங்கு வகிக்கிறது.   இதனை நம்மில் பெரும்பாலானோர் உணருவதில்லை.  இவற்றிற்கு தேவையான அளவிற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.   இவை ஒவ்வொன்றும் நமது உடலை உள்ளும் புறமும் சுத்தப்படுத்தும் முக்கிய பணி ஆற்றுகின்றன.

நாம் உட் சுவாசிக்கும் காற்று பிராண வாயுவை உடசெலுத்தி இரத்தத்தின் மூலமாக  உடலில் உள்ள நுண்ணுயிர் செல்களை சுத்தப்படுத்துகின்றன.  இதற்கு தேவையான அளவுக்கு நாம் பிராண வாயுவை உடகொண்டு செல்களிலிருந்து அழுக்குகளை சேகரித்துவரும் கரியமில வாயுவை முழுவதுமாக வெளியேற்ற வேண்டும்.   இதனை நாம் சீராக நடைபெற அனுமதிக்கிறோமா?  அது மட்டுமல்ல.  நம்முடலில் தோலில் உள்ள நுண் துவாரங்கள் வழியாகவும் நம் உடலுக்குள் பிராண வாயு பிரவேசிக்கிறது.
எந்த அளவிற்கு இரத்தம் மூலமாக பிராண வாயு உடலுக்கு தேவையோ அந்த அளவுக்கு தோல் வழியாகவும் பிராண வாயு நம் உடலுக்கு தேவைப்படுகிறது.

அடுத்தபடியாக நீர்.    நமது உடல் உழைப்பால் வெப்பம் அதிகரிக்கிறது. அப்பொழுது உடலில் உள்ள நீர் அந்த வெப்பத்தை உள்வாங்கி வியர்வையாக வெளியேற்றுகிறது.  அவ்வாறு வெளியேற்றும்பொழுது செல்களின் கழிவுகளையும் சேகரித்து சிறுநீரகவும் வியர்வையாகவும் வெளியேற்றுகிறது.    இதற்கு தேவையான அளவிற்கு நாம் தினமும் நீர் பருக வேண்டும்.     உடலின் வெளிப்புறமாகவும் நீரின் தேவை இருக்கிறது.  தொழில் உள்ள நுண் துவாரங்களை அழுக்கு நீக்கி சுத்தம் செய்கிறது.     இதற்காக நாம் குளிக்கிறோம்.

நாம் குளிப்பதன் பலன் இது மட்டுமல்ல. இது உடல் வெப்பத்தை தணிப்பதுடன் உடலின் வெளிப்புறமாக அமைந்திருக்கும் நம் சக்தி மண்டலத்தில் மன எண்ணங்களால் அல்லது எண்ணச்சிதறல்களால் உருவாகும் வெப்பத்தையும் கட்டுப்படுத்துகிறது.   இது நம் மனதின் வெப்பத்தை தணிக்கிறது.  சக்தி மண்டலம் அல்லது மனம் வெப்பமடையும்பொழுது அதன் செயல்படும் சக்தி குறைகிறது; தளர்வு ஏற்படுகிறது.    குளிப்பது இதை சீராக்குகிறது. மனதிற்கு செயல்படும் திறன் அதிகரிக்கிறது.   சரியான முறையில் குளிப்பதால் மட்டுமே நல்ல பலன் ஏற்படும்.    இது எப்படி ?   சரியாக முறையாக குளிப்பது எப்படி? சரியாக வாயுவை உட்க்கொள்வது எப்படி?    விளக்கம் இனி வரும் .

நம் உயிர் ஆகாயத்தின் அம்சம்.   இது மனதின் தியானப்பயிற்சியின் மூலம் உடல் அழியும்வரையில் சீறாகப் பாதுகாக்கப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்.  நன்றி வணக்கம்.