ஞாயிறு, 19 ஜனவரி, 2020

" நான்" யார் - Brain and Self

மூளை - "நான்" - தொடர்பு 


நான் என்பது ஆத்மாவா!

"நான்" என்பது எது?

"நான்" என்பது மனம் புத்தி மூளை இம்மூன்றின் ஒருங்கிணைந்த இயக்கம்.

மனம் மாயை சம்பந்தப்பட்டது. புத்தியும் அப்படிப்பட்டதே.   ஆனால் மூளை பௌதிக சம்பந்தம் உடையது.  

நான் என்பது சூக்ஷ்ம ஸ்தூல தொடர்புகளின்  கலவை.  ஆனாலும் நான் என்பது பௌதிகத்திற்கு மட்டுமே சொந்தம்.   அதாவது தெளிவாக கூறினால் இந்த உடலுக்கு மட்டுமே சொந்தம்.   ஆத்மாவிற்க்கோ அல்லது மனத்திற்கோ சொந்தமல்ல.  அதனால் தான் என் ஆத்மா என் உடல் என்று சொல்கிறோம்.

உடல் அழியும்போது இந்த "நான்"- உம் அழிந்து போகிறது.

ஆத்மாவிற்கு தனி அடையாளம் கிடையாது.  உடலால் மட்டுமே அதற்கு அடையாளமும் அங்கீகாரமும் ஏற்படுகிறது.

உடல் இல்லையேல் "நான்" இல்லை.  ஒவ்வொரு நான் -க்கும் ஒவ்வொரு தனியான அடையாளம் உண்டு.  அதில் தலையாயது தான் பெயர்.   அடுத்தது தனித்துவம் மற்றும் புகழ்  அல்லது இகழ்ச்சி.  இது உடலாலும் அதன் இயக்கத்தாலும் கிடைப்பது. 

மனது அது எது?   அது நமது ஆத்மாவின் பிரதிநிதி.  அதனுடைய இரட்டை.  மனது அல்லது மனம் தனக்கு உதவுவதற்காக ஏற்பட்ட மூளையை கட்டுப்படுத்தி வழிநடத்து வதற்காக அமையப்பெற்றது.  

உடலையும் உயிரையும் கட்டுப்படுத்துவது மனம்.  புத்தியின் வாயிலாக மூளையை இயங்கச்செய்கிறது.  ஆகவே "நான்"- ம் அதன் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது; இயங்குகிறது. 

மனம் என்பது ஆன்மாவையும் உடலையும் சமநிலையில் சீக்ச்செய்யும் ஒரு ஒரு புள்ளி.   இந்த புள்ளிக்கு நிலையான இருப்பிடம் கிடையாது.  அது ஆத்மாவிற்குள்ளும் உடலுளுக்குள்ளும் மாறி மாறி சஞ்சரிக்கும்.  பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு கஷ்டங்கள் விரும்பியது அது ஆத்மாவிற்குள் போய் விடும்   மரணத்தை பார்க்கும்போது நோயாளிகளை பார்க்கும்போது அது ஆத்மாவிற்குள் போய்விடும்.   பணம் கையில் செழிப்பாக வரும்பொழுதும்  சந்தோஷமாக இருக்கும்பொழுதும்   அது உடலுக்குள் வந்துவிடும். இப்படி மனம் நொடிக்கு நொடி சஞ்சரித்துக்கொண்டு தன இடத்தை மாற்றிக்கொண்டே இருக்கும்  

மனதிற்கும் புத்திக்கும் உடலில் உள்ள அடையாளம் மூளை. அது தான்  அவற்றின் இயக்கங்களுக்கு அடிப்படை ஆதாரம்.  

உடலில் "நான்" என்பதின் அடையாளம்  மூளை என்றால்  உடலில் பிரதானம் அது  மட்டுமே  என்றாகிறது.  அது தான் மனதையும் புத்தியையும் பிரதிநிதானம் செய்கிறது.   உடலில் மூளைதான் முக்கியம் என்று சொல்வதைவிட உடலில் மூளைதான் எல்லாம் என்று சொல்வதே உசிதமாக இருக்கும்.   

ஆகவே "நான்" என்பதன் பௌதிக அடையாளம் மூளை.

 உடலில் மூளை தான் எல்லாம்.  மூளை இல்லையேல் நான் இல்லை.  உடல் என்னுடையது.  அதாவது "நான்" என்கிற மூளைக்கு சொந்தம்.

அப்படியானால் உடலில் இருக்கும் பிற உறுப்புகள் எல்லாம் என்ன? ஏன் ?

உணவை உட்கொண்டு சிதைத்து உடலுக்கு தேவையான வகையில் பல சத்துக்களாக பிரித்துத்தாயார் செய்வதற்காக வயிறும் வாயும் குடல் முதலான உணவு மண்டல அவயவங்களும் அமைந்தன.   சத்துக்களை சேகரித்து தேவையான எல்லா இடங்களும் கொண்டு சேர்ப்பதற்காகவும் அந்தந்த இடங்களில் இருந்து அழுக்குகளை நீக்கி கொண்டு வருவதர்கா கவும்   இதயம் மற்றும் இரத்த நாளங்கள் முதலானவைகள்.   இந்த அழுக்கு கலந்த இரத்தத்திலிருந்து அழுக்கை  நீக்கி சுத்தப்படுத்துவதற்காக நுரையீரல் கிட்னி முதலானவைகள்.  இவற்றை எல்லாம் கட்டுப்படுத்தி சீராக செயல்படுத்தும் அதிகாரம் மூளைக்குத்தான்.

கைகால்கள் உணவு மண்டல இயக்கத்திற்கு உதவுவதற்காக ஏற்பட்டவை.  கால்கள்  உணவு இருக்குமிடம் தேடி இடம் விட்டு இடம் போவதற்காக.  கைகள் விரல்கள் அவற்றை சேகரித்து எடுப்பதற்காக.  உடலைத்தூக்கி நிறுத்துவதற்காக எலும்பு மண்டலம்.  உடலுக்கு பலம் சேர்ப்பதற்காக எலும்பைச்சுற்றிலும் தசைகள். உடலின் ஒவ்வொரு பாகத்திலிருந்தும்  தகவல் சேகரிப்பதற்கும்  அங்கெல்லாம் கட்டளைகளை அனுப்புவதற்கும் நரம்பு மண்டலம்.   

சுற்றிலும் பார்த்து சுற்றுப்புறங்களைப் அறிந்து  தேவையானவற்றை கை  கால்களின் உதவியுடன் சேகரிப்பதற்கும் ஆபத்துகளை உணர்ந்து உடலைப்  பாதுகாப்பதற்காகவும் ஒளியின் அம்சமான கண்கள்.



உடல் மொத்தமும் பூமியின் அம்சம், அடையாளம்.  ரத்தம் நீரின் அம்சம், அடையாளம்.    நுரையீரல்,  மூக்கு வாயுவின் அம்சம், அடையாளம் .

ஐந்தாவது பூதமான ஆகாயம் தான் நமது மனது.  எல்லையற்றது.

இப்படித்தான்  பஞ்ச பூதங்களும் நம் உடலில் அடக்கம். 

மூளையைப் பாதுகாப்பதற்காகவும், நிலைநிறுத்துவதற்காகவும் அதன் செயல்பாடுகளுக்கு உதவுவதாற்காகவும் அமையப்பெற்றவையே  உடலின் எல்லா பிற அவயவங்களும் 

உடலின் அணைத்து பாகங்களின்  ஒருங்கிணைப்பும் மூளையின் கட்டுப்பாட்டில் தான்.  ஆகவே உடலில் மூளையே தலையாயது.

உடலிற்கு சரி செய்யமுடியாத சேதம் ஏற்பட்டால் மூளையால் இயங்க இயலாது; அது அழிந்து விடும்.   மூளை சேதம் அடைந்தால்  உடலும் அழிந்துவிடும்.

மூளை அழியும்பொழுது அதுவரையில் மாயையாய் நிலைபெற்றிருந்த "நான்" அழிந்து விடுகிறது.  அதன் பிறகு "நான்" இல்லை என்று ஆகிறது. 

எஞ்சி நிற்பது ஆத்மா என்கிற சக்திக்கோப்பு மட்டுமே.  அது உருவாக்கிய உடல் அழிந்தபோது,  உடலெடுத்ததனால்  ஏற்பட்ட சில மேம்பட்ட அல்லது மேலும் மாசடைந்த மாற்றங்களுடன் அது மீண்டும் முன்னர் இருந்ததுபோல்   ஆகாயத்தில் நிலை கொண்டது.   

"நான்" என்பது மூளையும் அதைச்சார்ந்த உடலு ம்.  " நான்" என்பது நமது மனதில் ஏற்படும் ஒரு உணர்வு.   மனம் எண்ணங்களாக நம் உடலைச் சுற்றிப்பற்றி அமைந்திருக்கின்றது .

பொதுவாக நாம் உணர்வுகளால்  நம் உடலில் நிறைந்து இருக்கிறோம். உடல்,  உடலைப்பற்றிய மற்றும் உடலைச்சுற்றிய எண்ணங்கள், உடல் மற்றும் அதன் உறவுகள் சம்பந்தப்பட்ட எண்ணங்கள் ஆகியவைகளால் மனம் எப்போதும் நிறைந்து இருக்கும்.

அதாவது சாதாரணமாக நாம் மனதளவில் உடலாகவே இருப்போம்.  அதாவது சாதாரணமாக "நான்" என்பது மனதளவில் உடல்  இந்த உணர்வுதான் நம்மில் இருக்கும்.  காரணம் நாம் மூளையையும் உடலையும் பிரித்துப் பார்ப்பதில்லை.   மூளை தான் நம்மில் தலையாயது என்பதை நாம் உணர்வதில்லை.

நம்மில் நம் உணர்வில் இருக்கும் "நான்" மனதளவில் ஆத்மாவாக மாறும் அசாதாரணமான நிலையை அடைய வேண்டும்.  இதுதான் நாம்  இந்த உடலில் சிலகாலம் நின்றதன் நல்ல விளைவாக இருக்கவேண்டும்.  உடல் அழியும் நிலையில் நாம் இந்த நிலையை எய்தி இருக்கவேண்டும்.   இந்த நிலையை எய்திய ஆத்மா மீண்டும் உடலெடுப்பதில்லை.

நம்மில் பெரும்பாலானோருக்கு"நான்" உடல் தான் என்ற நிலையிலேயே மரணம் ஏற்படுகிறது .       அந்த "நான்" என்ற நிலையிலேயே அந்த ஆத்மா மீண்டும் உடலெடுக்கிறது. "நான்" உடல் என்ற உணர்வில் இருந்து விடுபட்டு  
"நான்" ஆத்மா என்னும் உணர்வு நிலையை எட்டும் முயற்சியைத் தொடர்வதற்காக.

இது எப்படி?   இன்னொரு பதிவில் விளக்கமாக சிந்தனைகளை ஓடவிடுவோம்.