ஆன்மீகம் என்பது என்ன.?
பலரும் பலவிதமாக விளக்குகிறார்கள்.ஒவ்வொருவரும் மாறுபட்ட விளக்கங்களை தருகிறார்கள். எந்த விஷயத்தையும் இது சரிதானா என்று எண்ணிப்பார்த்து முடிவெடுப்பவர்கள் குழப்பத்துக்கே ஆளாகிறார்கள்.
இதறகு சரியான விளக்கம் என்ன .
இந்த உலகத்தில் மனோ தத்துவம் முதன்முதலில் உணரப்பட்டது இந்தியாவில் தான். அந்த அடிப்படையிலேயே ஆதி காலம் முதலாக வாழ்க்கை முறை அமைந்து இருந்தது.
மனித உடல் ஒரு இயந்திரமா? ஆம்.
அது உள்ளிருந்தே இயக்கப்படுகிற ஒரு இயந்திரம் தான். எல்லா உயரின ங்களும் அப்படித்தான். எல்லாவற்றிற்கும் உள்ளிலிருந்தே இயக்கப்படும் இயக்கம் இருக்கிறது.
இந்த இயக்கம் எப்படி நடக்கிறது.
மனிதனை பொறுத்தவரையில் மனம் தான் உடலை இயக்குகிறது. உடலின் நடவடிக்கைகளை தீர்மானிக்கிறது. எல்லோருடைய மனமும் ஒரே மாதிரி இயங்குவதில்லை. ஒவ்வொருவருடைய மனமும் ஒவ்வொரு விதமாக வித்தியாசமான முறையில் இயங்குகிறது. என்ன காரணம்?
உடலை இயக்கும் மனதை இயக்குவது யார் அல்லது எது?
நமது இயக்கத்தை கவனித்தால் ஒன்றை புரிந்து கொள்ளலாம். எண்ணங்களே மனதை இயக்குகின்றன என்பதே அது.
எண்ணங்கள் எப்படிப்பட்டவை ?
எண்ணங்கள் இரட்டை தன்மை உடையவை. ஒரே விஷயத்தைப்பற்றி இரண்டு விதமான சிந்தனைகள் தான் எப்பொழுதும் மனதில் ஓடிக் கொண்டிருக்கும். ஒன்று உடல் அல்லது பொருள் சம்பந்தப்பட்டது. இன்னொன்று சரி, தவறு பார்க்கும் சரியான சிந்தனை. இது பொருட் தன்மைக்கு அப்பாற்பட்டது. உடல் சம்பந்தப்பட்ட சிந்தனை எப்பொழுதும் பொருள் தழுவியதாகவே இருக்கும். இன்னொரு சிந்தனை பொருள் அல்லாது உடல் சம்பந்தப்படாதது. அதற்கு அப்பாற்பட்டது. அல்லது அதற்கு அதீதமானது என்று சொல்லலாம்.
இரண்டு விதமான எண்ணங்களை தோற்றுவிக்கும் மனமும் இரட்டைத் தன்மையது தான். ஒன்று உடல் அல்லது பொருள் அல்லது உடல் இன்பம் சம்பந்தப்பட்டு இயங்கும் மனம். இது உள் மனம். வேறொன்று இவற்றிற்கு அப்பாற்பட்ட சிந்தனைத் தன்மை உடையது. இது அதனுள் இருக்கும் பதிவுகளின் அடிப்படையில் இயங்குகிறது. இது வெளி அல்லது ஆழ் மனம். ஒரு மனம் உடலுக்குள் இருந்து இயங்குகிறது. மற்றொன்று உடலுக்கு வெளியில் இருந்து இயங்குகிறது.
உடலும் உள்மனமும் ஒருமுகமாக இணைந்து இயங்குவது யோகத்தின் முதல்படி. ஆழ் (வெளி) மனமும் உள் மனமும் ஒருமுகமாக இணைந்து இயங்குவது யோகத்தின் அடுத்த நிலை. இன்றைய காலத்தில் யோகம் என்பது ஆங்கிலப் படுத்தப்பட்டு யோகா என்றும் யோகா என்பது உடற்பயிற்சி என்றும் பரவலாக அறியப்படுகிறது.
உண்மையில் யோகம் என்பது இணக்கம் என்று பொருள்படும். அதாவது அனைத்தும் ஒருங்கிணைந்த நிலை.
உள் மனம் ஆனது வெளி மனதிற்கு கட்டுப்பட்டு இயங்க வேண்டும். காரணம் உள்மனம் உடலுடன் அழியக்கூடியது. வெளி அல்லது ஆழ் மனம் பிரபஞ்ச சம்பந்தமுடையது. அதற்கும் அதன் பதிவுகளுக்கும் அழிவில்லை. அது எல்லாப் பிறவிகளிலும் தொடரும்.
அதனைத்தான் நாம் ஆன்மா என்கிறோம்.
இந்த உலகத்தில் எல்லாமே இரட்டை நிலை பெற்றிருக்கின்றன. இரவு-பகல், ஆண் -பெண், இருட்டு-வெளிச்சம். இது போல மனதிற்கும் இரட்டைத் தன்மை இருக்கவேண்டும் என்ற சிந்தனையின் வெளிப்பாடு தான் ஆன்மா என்ற மனதின் இன்னொரு நிலை அல்லது பகுதி.. இந்த அறிவு தான் மனோதத்துவத்தின் அடிப்படை. இதற்கு வித்திட்டதே இந்தியா தான்.
இது தான் ஆன்மீகத்தின் ஆரம்பம் . ஆன்மாவைப்பற்றிய அறிவே ஆன்மீகம் என்பது. இனி நாம் உள் மனதை மனம் என்றும் ஆழ் மனதை ஆன்மா என்றும் குறிப்பிடுவோம்.
நம் மனம் என்பது உடல் சம்பந்தப்பட்டது. அது தன வழியே போனால் உடல் சுகத்துக்கான வழிகளையே தேடும். வாய்க்கு ருசி, உடலுக்கு இன்பம், அதற்கு தேவையான பொருள், அதைத் தேடும் வழிகள் ஆகிய வழிகளிலூடேயே அது பயணிக்கும். இந்த பயணத்தின் பலன் இந்த உடலுக்கு கிடைக்கவேண்டும். இந்த அளவிலேயே நம் மனதின் போக்கு அமையும்.
தானாக இயங்கினாலும் இந்த மனம் ஆழ் மனமான ஆன்மாவுக்கு கட்டுப்பட்டது தான். மனதின் செயல் பாடுகள் அனைத்தும் ஆன்மாவில் பதிவாகிக்கொண்டிருக்கும். ஆன்மா உடலுக்கு அப்பாற்பட்ட சிந்தனைகளை உடையது. அதனுள் பதிவாகும் செயல்பாடுகளை ஆன்மா தன ஆய்வுக்கு உட்படுத்தும்.
மனம் உடல் சம்பந்தப்பட்டது மாதிரி ஆன்மா பிரபஞ்சம் சம்பந்தப்பட்டது. அதன் செயல்பாடுகள் பிரபஞ்ச நிலையிலேயே இருக்கும்.
பிரபஞ்சத்துக்கும் ஆன்மா என்ற ஆற்றலுக்குமிடையிலான வேறுபாடு தான் என்ன?
பிரபஞ்சம் என்பது பரிபூரணமான ஆற்றல், ஆன்மா என்பது குறையுள்ள , நிறைவற்ற, பலம் குறைந்த ஆற்றல்.
ஆன்மா பூரணத்துவம் அடைவதற் காகவே ஒரு உடலெடுக்கிறது. ஆன்மா தனது ஆற்றல் அதிகரிப்புக்குத் தேவையான உணர்வுகளை நம் மனதிற்கு தொடர்ந்து அனுப்பிக்கொண்டே இருக்கும்.
நம் மனதிற்கு பலவிதமான நிலைகள் இருக்கின்றன. மனதின் அதிர்வுகளின் அளவிற்கேற்ப அதன் நிலைகள் மாறுபட்டுக்கொண்டே இருக்கும். அதிர்வுகள் மிக குறைந்து இருக்கும்போதுஉடல் தூக்கத்துக்கு உட்படும். மனம் ஒரு குறிப்பிட்ட அலை வரிசை அதிர்வுகளின் இருக்கும்போது மட்டுமே ஆன்மாவின் உணர்வுகள் நம் மனதில் பதியும். இந்த நிலையில் ஏற்கப்படும் உணர்வுகள் அடிப்படையில் மனம் செயல்படும்போது தான் அது நேரான நேர்மறையான வழியில் செயல்படும். இந்த செயல்பாடு உடலின் சுகத்தையோ பந்த பாசங்களையோ வளர்க்காது. அதனால் பொருளாதார வளர்ச்சியின் வழியே செல்லாது.
மனதின் அதிர்வுகள் கூடிய அலைவரிசைகளில் அமைந்து அதிர்வுகள் அதிகமாகும்போது நமது மனம் எப்பொழுதும் பொருளாதார வளர்ச்சிக்கான சிந்தனைகளில் ஈடுபடும்..
இந்த சமயங்களில் நம் மனம் ஆன்மாவின் தொடர்பிலிருந்து விடுபட்டு வேறுபட்ட நிலையில் செயல்படும். இந்த எதிர்மறையான செயல்பாடுகள் ஆன்மாவில் பதிவாகும்போது, அங்கு இருக்கும் நேர்மறை ஆற்றலுடன் சேரும்போது, நேர்மறை ஆற்றல் குறைந்துகொண்டே வரும்.
இதன் விளைவாக உடல் அழியும்போதுஆன்மாவின் ஆற்றல் மிகவும் குறைந்து இருந்தால் மீண்டும் ஒரு உடல் எடுக்கும் சக்தி அதற்கு இருப்பதில்லை. ஆன்மாவில் நேர்மறை ஆற்றல் குறைந்த பக்ஷ அளவையும் விட குறையும்போது அது பிரபஞ்ச வெளியில் நிலை கொள்கிறது. இந்த நிலையில் தான் ஆன்மா ஆவி என்று அழைக்கப்படுகிறது. பிரபஞ்ச வெளியில் அது கொஞ்சம் கொஞ்சமாக சில பல காலங்களாக தனது ஆற்றலை வளர்த்து மீண்டும் உடலெடுக்கிறது.
பிரபஞ்ச வெளியில் ஆன்மா தனக்கென்று ஒரு உடலும் மனமும் அற்ற நிலையில் எப்படி தன சக்தியை வளர்க்கிறது ?
உடலுடன் வாழும் ஏதாவது ஒரு ஆன்மாவின் சக்தி மண்டலத்தில் இதற்காக தஞ்சம் புகுகிறது. சில சமயங்களில் நமது சக்தி மண்டலத்தில் இது போன்ற பல ஆன்மாக்கள் தஞ்சம் பெற்று நிலை கொள்கின்றன. சில சந்தர்ப்பங்களில்
நம்மில் சிலர் மனதளவில் இரட்டை ஆளுமைக்கு உட்படுவதற்கு இது தான் காரணம். எதாவது காரணத்தால் உள்மனம் தளரும்பொழுது சக்தி மண்டலத்தில் இருப்பவைகளில் பலமுள்ள ஓர் ஆன்மா அந்த மனதை மேலாண்மை கொள்கிறது. தளரும் மனம் மீண்டும் வலுவடையும் போது அது பின் வாங்குகிறது. நம் சக்தி மண்டலத்தில் நிலை கொள்ளும் ஆவிகள் ஒட்டுண்ணிகள் மாதிரி. அண்டி இருந்து சக்தியை உறுஞ்சுவன.
மனம் முற்றிலும் ஆன்மாவின் கட்டுக்குள் வரும்போது, இரண்டும் முற்றிலும் இணைந்து செயல்படும்போது, அதாவது நாம் யோக நிலையை அடையும்போது ஆன்மாவில் எதிர்மறை சக்தி வெளியேறி முற்றிலும் நேர்மறை சக்தி நிறையும். நேர்மறை சக்தி கூடுந்தோறும் ஆத்மாவின் எடை குறையும். எடை குறையுந்தோறும் ஆன்மா பூமியிலிருந்து மேல் நோக்கி நகரத்தொடங்கும். நேர்மறை சக்தி அதிகம் பெறும் தோறும் ஆன்மா
அந்த அளவிற்கு எடை குறையப்பெறும். இந்நிலையில் உடலிலிருந்து வெளியேறும் சுதந்திர ஆன்மாவானது பூமியின் ஈர்ப்பிலிருந்து விடுபட்டு மேல்நோக்கி சென்று கொண்டே இருக்கும். ஆன்மா முற்றிலும் நேர்மறை சக்தியாகும் போது எடையே இல்லாத நிலையை அடையும். அப்போது பூமியின் ஈர்ப்பிலிருந்து முற்றிலும் விடுபட்டு பிரபஞ்சத்தில் ( அநேகமாக ஈதர் ஆக) இணையும். இதுவே முக்தி.
இப்படி முற்றிலும் நேர்மறை சக்தி பெற்று பூமியின் ஈர்ப்பு சக்திக்கு அப்பாற்பட்ட பிரபஞ்சத்தை அடையப்பெற்ற ஆன்மாக்களே தெய்வங்கள் என்று நம்மிடையே அறியப்பெறுகிறார்கள். இவர்கள் நிலைகொள்ளும் பூமியின் ஈர்ப்புக்கு அப்பாற்பட்ட பிரபஞ்ச பகுதியையே நாம் விண்ணுலகம் என்று அழைக்கிறோம். இதுவே சமணக் கோட்ப்பாடு. இது தான் இன்றும் நம் பழக்கத்தில் இருந்து வருகிறது. நாம் இறைவனையும் தெய்வத்தையும் வேறுபாடு தெரியாமல் குழப்பிக்கொண்டிருக்கிறோம். தெய்வங்கள் நம்மிடையே பிறந்து வளர்ந்து இறைத்தன்மையை அடைந்தவர்கள். இறைவன் பிண்ட, அண்ட , பிரம்மாண்டங்களுக்கு அப்பாற்பட்டவன். இதை நாம் உணர வேண்டும்.
பலரும் பலவிதமாக விளக்குகிறார்கள்.ஒவ்வொருவரும் மாறுபட்ட விளக்கங்களை தருகிறார்கள். எந்த விஷயத்தையும் இது சரிதானா என்று எண்ணிப்பார்த்து முடிவெடுப்பவர்கள் குழப்பத்துக்கே ஆளாகிறார்கள்.
இதறகு சரியான விளக்கம் என்ன .
இந்த உலகத்தில் மனோ தத்துவம் முதன்முதலில் உணரப்பட்டது இந்தியாவில் தான். அந்த அடிப்படையிலேயே ஆதி காலம் முதலாக வாழ்க்கை முறை அமைந்து இருந்தது.
மனித உடல் ஒரு இயந்திரமா? ஆம்.
அது உள்ளிருந்தே இயக்கப்படுகிற ஒரு இயந்திரம் தான். எல்லா உயரின ங்களும் அப்படித்தான். எல்லாவற்றிற்கும் உள்ளிலிருந்தே இயக்கப்படும் இயக்கம் இருக்கிறது.
இந்த இயக்கம் எப்படி நடக்கிறது.
மனிதனை பொறுத்தவரையில் மனம் தான் உடலை இயக்குகிறது. உடலின் நடவடிக்கைகளை தீர்மானிக்கிறது. எல்லோருடைய மனமும் ஒரே மாதிரி இயங்குவதில்லை. ஒவ்வொருவருடைய மனமும் ஒவ்வொரு விதமாக வித்தியாசமான முறையில் இயங்குகிறது. என்ன காரணம்?
உடலை இயக்கும் மனதை இயக்குவது யார் அல்லது எது?
நமது இயக்கத்தை கவனித்தால் ஒன்றை புரிந்து கொள்ளலாம். எண்ணங்களே மனதை இயக்குகின்றன என்பதே அது.
எண்ணங்கள் எப்படிப்பட்டவை ?
எண்ணங்கள் இரட்டை தன்மை உடையவை. ஒரே விஷயத்தைப்பற்றி இரண்டு விதமான சிந்தனைகள் தான் எப்பொழுதும் மனதில் ஓடிக் கொண்டிருக்கும். ஒன்று உடல் அல்லது பொருள் சம்பந்தப்பட்டது. இன்னொன்று சரி, தவறு பார்க்கும் சரியான சிந்தனை. இது பொருட் தன்மைக்கு அப்பாற்பட்டது. உடல் சம்பந்தப்பட்ட சிந்தனை எப்பொழுதும் பொருள் தழுவியதாகவே இருக்கும். இன்னொரு சிந்தனை பொருள் அல்லாது உடல் சம்பந்தப்படாதது. அதற்கு அப்பாற்பட்டது. அல்லது அதற்கு அதீதமானது என்று சொல்லலாம்.
இரண்டு விதமான எண்ணங்களை தோற்றுவிக்கும் மனமும் இரட்டைத் தன்மையது தான். ஒன்று உடல் அல்லது பொருள் அல்லது உடல் இன்பம் சம்பந்தப்பட்டு இயங்கும் மனம். இது உள் மனம். வேறொன்று இவற்றிற்கு அப்பாற்பட்ட சிந்தனைத் தன்மை உடையது. இது அதனுள் இருக்கும் பதிவுகளின் அடிப்படையில் இயங்குகிறது. இது வெளி அல்லது ஆழ் மனம். ஒரு மனம் உடலுக்குள் இருந்து இயங்குகிறது. மற்றொன்று உடலுக்கு வெளியில் இருந்து இயங்குகிறது.
உடலும் உள்மனமும் ஒருமுகமாக இணைந்து இயங்குவது யோகத்தின் முதல்படி. ஆழ் (வெளி) மனமும் உள் மனமும் ஒருமுகமாக இணைந்து இயங்குவது யோகத்தின் அடுத்த நிலை. இன்றைய காலத்தில் யோகம் என்பது ஆங்கிலப் படுத்தப்பட்டு யோகா என்றும் யோகா என்பது உடற்பயிற்சி என்றும் பரவலாக அறியப்படுகிறது.
உண்மையில் யோகம் என்பது இணக்கம் என்று பொருள்படும். அதாவது அனைத்தும் ஒருங்கிணைந்த நிலை.
உள் மனம் ஆனது வெளி மனதிற்கு கட்டுப்பட்டு இயங்க வேண்டும். காரணம் உள்மனம் உடலுடன் அழியக்கூடியது. வெளி அல்லது ஆழ் மனம் பிரபஞ்ச சம்பந்தமுடையது. அதற்கும் அதன் பதிவுகளுக்கும் அழிவில்லை. அது எல்லாப் பிறவிகளிலும் தொடரும்.
அதனைத்தான் நாம் ஆன்மா என்கிறோம்.
இந்த உலகத்தில் எல்லாமே இரட்டை நிலை பெற்றிருக்கின்றன. இரவு-பகல், ஆண் -பெண், இருட்டு-வெளிச்சம். இது போல மனதிற்கும் இரட்டைத் தன்மை இருக்கவேண்டும் என்ற சிந்தனையின் வெளிப்பாடு தான் ஆன்மா என்ற மனதின் இன்னொரு நிலை அல்லது பகுதி.. இந்த அறிவு தான் மனோதத்துவத்தின் அடிப்படை. இதற்கு வித்திட்டதே இந்தியா தான்.
இது தான் ஆன்மீகத்தின் ஆரம்பம் . ஆன்மாவைப்பற்றிய அறிவே ஆன்மீகம் என்பது. இனி நாம் உள் மனதை மனம் என்றும் ஆழ் மனதை ஆன்மா என்றும் குறிப்பிடுவோம்.
நம் மனம் என்பது உடல் சம்பந்தப்பட்டது. அது தன வழியே போனால் உடல் சுகத்துக்கான வழிகளையே தேடும். வாய்க்கு ருசி, உடலுக்கு இன்பம், அதற்கு தேவையான பொருள், அதைத் தேடும் வழிகள் ஆகிய வழிகளிலூடேயே அது பயணிக்கும். இந்த பயணத்தின் பலன் இந்த உடலுக்கு கிடைக்கவேண்டும். இந்த அளவிலேயே நம் மனதின் போக்கு அமையும்.
தானாக இயங்கினாலும் இந்த மனம் ஆழ் மனமான ஆன்மாவுக்கு கட்டுப்பட்டது தான். மனதின் செயல் பாடுகள் அனைத்தும் ஆன்மாவில் பதிவாகிக்கொண்டிருக்கும். ஆன்மா உடலுக்கு அப்பாற்பட்ட சிந்தனைகளை உடையது. அதனுள் பதிவாகும் செயல்பாடுகளை ஆன்மா தன ஆய்வுக்கு உட்படுத்தும்.
மனம் உடல் சம்பந்தப்பட்டது மாதிரி ஆன்மா பிரபஞ்சம் சம்பந்தப்பட்டது. அதன் செயல்பாடுகள் பிரபஞ்ச நிலையிலேயே இருக்கும்.
பிரபஞ்சத்துக்கும் ஆன்மா என்ற ஆற்றலுக்குமிடையிலான வேறுபாடு தான் என்ன?
பிரபஞ்சம் என்பது பரிபூரணமான ஆற்றல், ஆன்மா என்பது குறையுள்ள , நிறைவற்ற, பலம் குறைந்த ஆற்றல்.
ஆன்மா பூரணத்துவம் அடைவதற் காகவே ஒரு உடலெடுக்கிறது. ஆன்மா தனது ஆற்றல் அதிகரிப்புக்குத் தேவையான உணர்வுகளை நம் மனதிற்கு தொடர்ந்து அனுப்பிக்கொண்டே இருக்கும்.
நம் மனதிற்கு பலவிதமான நிலைகள் இருக்கின்றன. மனதின் அதிர்வுகளின் அளவிற்கேற்ப அதன் நிலைகள் மாறுபட்டுக்கொண்டே இருக்கும். அதிர்வுகள் மிக குறைந்து இருக்கும்போதுஉடல் தூக்கத்துக்கு உட்படும். மனம் ஒரு குறிப்பிட்ட அலை வரிசை அதிர்வுகளின் இருக்கும்போது மட்டுமே ஆன்மாவின் உணர்வுகள் நம் மனதில் பதியும். இந்த நிலையில் ஏற்கப்படும் உணர்வுகள் அடிப்படையில் மனம் செயல்படும்போது தான் அது நேரான நேர்மறையான வழியில் செயல்படும். இந்த செயல்பாடு உடலின் சுகத்தையோ பந்த பாசங்களையோ வளர்க்காது. அதனால் பொருளாதார வளர்ச்சியின் வழியே செல்லாது.
மனதின் அதிர்வுகள் கூடிய அலைவரிசைகளில் அமைந்து அதிர்வுகள் அதிகமாகும்போது நமது மனம் எப்பொழுதும் பொருளாதார வளர்ச்சிக்கான சிந்தனைகளில் ஈடுபடும்..
இந்த சமயங்களில் நம் மனம் ஆன்மாவின் தொடர்பிலிருந்து விடுபட்டு வேறுபட்ட நிலையில் செயல்படும். இந்த எதிர்மறையான செயல்பாடுகள் ஆன்மாவில் பதிவாகும்போது, அங்கு இருக்கும் நேர்மறை ஆற்றலுடன் சேரும்போது, நேர்மறை ஆற்றல் குறைந்துகொண்டே வரும்.
இதன் விளைவாக உடல் அழியும்போதுஆன்மாவின் ஆற்றல் மிகவும் குறைந்து இருந்தால் மீண்டும் ஒரு உடல் எடுக்கும் சக்தி அதற்கு இருப்பதில்லை. ஆன்மாவில் நேர்மறை ஆற்றல் குறைந்த பக்ஷ அளவையும் விட குறையும்போது அது பிரபஞ்ச வெளியில் நிலை கொள்கிறது. இந்த நிலையில் தான் ஆன்மா ஆவி என்று அழைக்கப்படுகிறது. பிரபஞ்ச வெளியில் அது கொஞ்சம் கொஞ்சமாக சில பல காலங்களாக தனது ஆற்றலை வளர்த்து மீண்டும் உடலெடுக்கிறது.
பிரபஞ்ச வெளியில் ஆன்மா தனக்கென்று ஒரு உடலும் மனமும் அற்ற நிலையில் எப்படி தன சக்தியை வளர்க்கிறது ?
உடலுடன் வாழும் ஏதாவது ஒரு ஆன்மாவின் சக்தி மண்டலத்தில் இதற்காக தஞ்சம் புகுகிறது. சில சமயங்களில் நமது சக்தி மண்டலத்தில் இது போன்ற பல ஆன்மாக்கள் தஞ்சம் பெற்று நிலை கொள்கின்றன. சில சந்தர்ப்பங்களில்
நம்மில் சிலர் மனதளவில் இரட்டை ஆளுமைக்கு உட்படுவதற்கு இது தான் காரணம். எதாவது காரணத்தால் உள்மனம் தளரும்பொழுது சக்தி மண்டலத்தில் இருப்பவைகளில் பலமுள்ள ஓர் ஆன்மா அந்த மனதை மேலாண்மை கொள்கிறது. தளரும் மனம் மீண்டும் வலுவடையும் போது அது பின் வாங்குகிறது. நம் சக்தி மண்டலத்தில் நிலை கொள்ளும் ஆவிகள் ஒட்டுண்ணிகள் மாதிரி. அண்டி இருந்து சக்தியை உறுஞ்சுவன.
மனம் முற்றிலும் ஆன்மாவின் கட்டுக்குள் வரும்போது, இரண்டும் முற்றிலும் இணைந்து செயல்படும்போது, அதாவது நாம் யோக நிலையை அடையும்போது ஆன்மாவில் எதிர்மறை சக்தி வெளியேறி முற்றிலும் நேர்மறை சக்தி நிறையும். நேர்மறை சக்தி கூடுந்தோறும் ஆத்மாவின் எடை குறையும். எடை குறையுந்தோறும் ஆன்மா பூமியிலிருந்து மேல் நோக்கி நகரத்தொடங்கும். நேர்மறை சக்தி அதிகம் பெறும் தோறும் ஆன்மா
அந்த அளவிற்கு எடை குறையப்பெறும். இந்நிலையில் உடலிலிருந்து வெளியேறும் சுதந்திர ஆன்மாவானது பூமியின் ஈர்ப்பிலிருந்து விடுபட்டு மேல்நோக்கி சென்று கொண்டே இருக்கும். ஆன்மா முற்றிலும் நேர்மறை சக்தியாகும் போது எடையே இல்லாத நிலையை அடையும். அப்போது பூமியின் ஈர்ப்பிலிருந்து முற்றிலும் விடுபட்டு பிரபஞ்சத்தில் ( அநேகமாக ஈதர் ஆக) இணையும். இதுவே முக்தி.
இப்படி முற்றிலும் நேர்மறை சக்தி பெற்று பூமியின் ஈர்ப்பு சக்திக்கு அப்பாற்பட்ட பிரபஞ்சத்தை அடையப்பெற்ற ஆன்மாக்களே தெய்வங்கள் என்று நம்மிடையே அறியப்பெறுகிறார்கள். இவர்கள் நிலைகொள்ளும் பூமியின் ஈர்ப்புக்கு அப்பாற்பட்ட பிரபஞ்ச பகுதியையே நாம் விண்ணுலகம் என்று அழைக்கிறோம். இதுவே சமணக் கோட்ப்பாடு. இது தான் இன்றும் நம் பழக்கத்தில் இருந்து வருகிறது. நாம் இறைவனையும் தெய்வத்தையும் வேறுபாடு தெரியாமல் குழப்பிக்கொண்டிருக்கிறோம். தெய்வங்கள் நம்மிடையே பிறந்து வளர்ந்து இறைத்தன்மையை அடைந்தவர்கள். இறைவன் பிண்ட, அண்ட , பிரம்மாண்டங்களுக்கு அப்பாற்பட்டவன். இதை நாம் உணர வேண்டும்.